"சரி, உனக்கு பொண்ண பிடிச்சுதா?"
"உங்களுக்கு பிடிச்சா, எனக்கு பிடித்தம்தான்."
"அப்ப ஒரு மாசத்துல நிக்காவ வச்சுக்கலாமா?" என்று நிக்கத் கேட்டார்.
"எப்பவேணா வச்சுக்கங்க!" என்று கூறினான் அப்துல் .
“சரி அபூ!"
அவன் கிளம்பி போய் விட்டான்.
ஒரு மாதத்தில், அவன் நிக்கா நடந்தது, அவன் மனைவி ஆமிரா பார்க்க நல்லாதான் இருந்தாள் , ஆனால், என்னவோ அவனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.
எல்லா சடங்குகளும் முடிந்தவுடன் "அம்மீ, எல்லாம் முடிஞ்சுதில்ல, நான் ஊருக்கு போகனும் கிளாஸெல்லாம் மிஸ் ஆகுது."
"உடனேயே போகனுமா அபு? அந்த பொண்ணு இப்பத்தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு, இன்னும் நடக்க வேண்டியது இருக்கு, அதல்லாம் முடிந்ததும், இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு, அப்புறம் போகலாம் அபு."
“இல்ல அம்மீ , கிளாஸஸ் இருக்கு, அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு, அதனால நான் போகனும், வேற எல்லா சடங்கும் அப்புறம் பார்த்துக்கலாம்.“
"என்ன அபு பேசற, நம்ம வீட்டு பெண்ணுக்கு, யார்னா இப்படி செய்ஞ்ஜா நாம சும்மா இருப்பமா?"
“என்னம்மீ, படிச்சுன்றவனுக்கு நிக்கா செய்ஞ்சுட்டு, இப்ப என்ன காலேஜூக்கு போக வேண்டாம்கிறீங்க?"
"ஒருக்கா, அவங்களுக்கு வேற பொண்ண பிடிச்சிருக்கோ என்னமோ.....?”
"நான் என் அம்மீகிட்ட பேசறேன்!"
"நானும் உங்க அம்மீகிட்டதன் பேசறேன், ஆனா நிக்கா உங்களோடதன முடிஞ்சுது, நீங்க காலேஜூக்கு போவனும்னா, என்கிட்ட சொல்லோனும், அம்மீகிட்ட சொன்னா பத்துமா?"
"அம்மீ, நான் களம்பறேன்!" என்று கூறிவிட்டு, கிளம்பிவிட்டான்
.
வீட்டில் இன்னும் விருந்தாளிகள் இருந்தார்கள்.
நிக்கத் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார், என்ன இந்த பெண் நேத்துதான் நிக்கா ஆச்சு அதுக்குள்ள இப்படி பேசுதே, அவன எப்படி சமாதானம் செய்ய,யோசித்துக் கொண்டிருந்தார். அங்கே நின்றுக் கொண்டிருந்த மருமகளிடம் "என்ன ஆமிரா, நான்தான் பேசறன நீ எதுக்கு நடுல வந்த? இப்ப அவன் கோவத்தோட போறான் பாரு."