அவர்கள் செய்தது தவறு, அதன் பின் விளைவுகள் என்ன என்று அறியாத சிறுவர்கள்
அவர்களுக்கு பதிநான்கு வயது, ஒன்றும் அறியாத வயது , ஆறு மாதங்களுக்கு பிறகு
தனத்தின் வயிறு வீங்கியிருந்தது , அந்த தோப்பில் இருவரும் நடந்து வந்தனர், “தனம், உன் வயிறு வீங்கியிருக்கு, ஏன்?" என்று கேட்டான்
"தெரிலடா, அம்மாதான் மருத்துவச்சி, அதான் நம்ம ஊர் நா்ஸ், அவங்கள கூட்டு விசாரிச்சாங்க, அவங்க என் வயித்துல குழந்த இருக்குங்கறாங்க, அது எப்படி என் வயித்துல வந்ததுன்னு எனக்கு தெரில, அம்மா என்ன நல்லா அடிச்சுட்டாங்க."
"எதுக்கு உங்க அம்மா உன்ன அடிச்சாங்க?"
"இந்த குழந்த எப்படி உன் வயித்துல வந்ததுன்னு."
"சாி, நான் கேக்குறேன் , எப்படி வந்தது ?"
"எனக்கே தெரியாதுங்கறன், எல்லாரும் இதையே கேக்கறீங்க? எனக்கு தொியலையே!"
"சரி நீ ஏன் ஸ்கூலுக்கு வரதில்ல?"
“இதனால எங்க அம்மா ஸ்கூலுக்கு போக கூடாதுன்டாங்க, யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க , நீயும் சொல்லிடாத...."
“நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன், நீ சீக்ரம் ஸ்கூலுக்கு வா, எனக்கு போா் அடிக்குது."
"சாி!"
அதற்குப் பிறகு அவர்கள் பார்த்து கொள்ள வில்லை.
அவன் பெற்றோர்களுடன், அவன் ஊரைவிட்டு போய் விட்டான் ஒன்றும் தெரியாது.
அப்துல் சிலையானான், தான் செய்த தவறு கண் முன்னால் வந்து போயிற்று.
ஐயோ, எவ்வளவு பெரிய பாவம் செய்துட்டேன் தனம், உனக்கு நான் பெரிய பாவம் செய்துட்டேனே!" என்று கதறினான்.
அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிக மாகியது.
‘அந்த அறியாத வயதில் என்ன பாடு பட்டிருப்பாள், எவ்வளவு அடி வாங்கி
இருப்பாள், எவ்வளவு இடி சொல் வாங்கி இருப்பா என்று மிகவும் வேதனை பட்டான்.
அவன் கண்களில் கண்ணீர், அம்மீயிடம் எப்படி சொல்வேன்… ஹே அல்லாஹ் நான் தவறு செய்து விட்டேன், எப்படியாவது அதை சீர் செய்ய வழியை காமிங்க அல்லாஹ் ‘ என்று வேதனையோடு வேண்டினான்.
தன்னை சமாளித்துக் கொண்டு முகத்தை கழுவிக் கொண்டு தன் அம்மீயை பார்க்க சென்றான்.
அவன் அம்மீயின் ரூமுக்கு சென்றான், அவன் வருவதை பார்த்து, ”என்ன அபூ, ஏதாச்சம் வேனுமா?"