"எங்க போனாலும், இங்கதான வரனும்!" என்று திமிராக கூறினாள்.
நிக்கத் கல் போல நின்றுவிட்டார்.. அப்போது அங்கு வந்த ஜாஃபர், "நிக்கத்!" என்று கூப்பிட்டார், தன் நினைவுக்கு வந்த நிக்கத் "என்ன ஜாஃபர் ?
என்ன விஷயம்?"என்று கேட்டார்.
"ஒன்னுமில்ல, நம்ம அபுக்கு எக்ஸாம் இருக்காம், ஊருக்கு அவசரமா போய்டான். எக்ஸாம் முடிஞ்ச உடனே வந்தர்ரேன்னு போயிருக்கான்."
"சரி, அதுக்கு நீ ஏன் இப்படியிருக்க?"
"இவ்வளவு விருந்தாளிங்க இருக்காங்க, இப்ப இவன் கிளம்பிட்டானே, அவக என்ன நினைக்குவாக?”
“அவங்க எல்லார்க்கும், அவன் படிக்கிறான்னு தெரியும், நீ கவல படாதே. யார் என்ன பேசினாலும் நான் பாத்துக்கறேன்!"நிக்கத்தின் தலையை தடவிக்கொடுத்து அவரை சமாதானப்படுத்தினார்.
மனதை திடப்படுத்திக் கொண்டு மற்றதை கவனித்தார் நிக்கத்.
அப்துல் மனது நிம்மதி இல்லை, தான் தவறு செய்தோம் என தெரிகிறது, எப்படி, இந்த மாதிரி ஒரு பெண்ணை பார்த்தார் அம்மீ, எவ்வளவு திமிர். நான் என்னவோ படிப்பு முடிந்தவுடன் மற்ற எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து , அம்மீயிடம் ஊருக்கு போவதை கூறிவிட்டு, அவளிடம் எடுத்து கூறலாம் என்று நினைத்திருந்தான்,அதற்குள் அவள் பேசியவிதம் அவனுக்குள் கோவத்தை கிளப்பிவிட்டது.
ஒரு வாரமாக நிக்கத் அப்துலுக்கு போன் செய்து, அவன் போனை எடுக்கவே இல்லை, அவன் ஒரு நாளும் இப்படி இருந்ததில்லை. ரொம்ப கோவத்தில் இருப்பான் போல, இதற்கிடையில், இந்தப் பெண்ணின் ஆணவம், அகங்காரம், எதிர்த்துப் பேசுதல், எல்லாவற்றையும் பார்த்து ‘ஐயோ என் மகனுக்கு இந்த பொண்ண நிக்கா செய்து எவ்வளவு பெரிய தப்பு செய்துட்டன், இனி அவன் வாழ்க்கையை எப்படி சரி செய்ய? ஹே அல்லா என் மகன் வாழ்க்கையை நீங்க தான் சரி செய்யனும், ‘ என்று வேண்டி நமாஸ் செய்தார்.
வேறு வழி இல்லாமல் ஜாஃபரிடம் விஷயத்தை சொல்லிவிட்டார் நிக்கத், என்னதான் அவர்கள் அன்னியோன்யமாக இருந்தாலும் கணவனின் மனதை பாதிக்கும் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார், ஆனால் இன்று அவரால் தாங்கமுடியவில்லை.
ஜாஃபர் முழுக்க கேட்டுவிட்டு, "கண்ணீர் விடாதே நிக்கத், இதில உன் தப்பு ஒன்னுமில்ல, நான் அப்துல் கிட்ட பேசறேன், அவன் புரிஞ்சுப்பான், நீ கவல படாத."
“எனக்கு, நம்ம மகன பாக்கனுங்க , அவங்கிட்ட மன்னிப்பு கேக்கனும், "