"வாப்பா! என்ன ஆச்சு, இவ்வளவு காலைல வந்திருக்கீங்க?"
"ஒன்னுமில்ல பயப்படாத அபு, சும்மா உன்னை பார்க்க வந்தேன்! வா, என் ஹோட்டலுக்கு போகலாம்."
"வாப்பா எனக்கு லாபுக்கு போகனும்,ஃப்ரண்டு வெயிட் பண்றான், நான் போன் பண்ணி சொல்லிடறன் வரமுடியாதுன்னு , அப்படியே டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றான், சென்ற வேகத்திலேயே வந்துவிட்டான்.
இருவரும் கிளம்பி ஹோட்டலுக்கு வந்தனர்.
அப்துலுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஜாஃபா் டிஃபனுக்கு ஆர்டா் கொடுத்தார்.
"சொல்லு அபூ, எப்படி இருக்க? போனையும் காணோம், ஆளையும் காணோம், என்ன ஆச்சு அபூ உனக்கு?"
"ஏன் வாப்பா, அம்மீ ஏதாவது சொன்னாங்களா?"
"நிறைய சொன்னாங்க, நீ எத பத்தின்னு சொல்லு?"
"ம், ஒன்னுமில்ல வாப்பா. சொல்லுங்க, என்ன விஷயம் இவ்வளவு துாரம் வந்திருக்கீங்க ?"
"உன்ன பாக்கதான் வந்தன், நீ உங்க அம்மீ
போன் செய்ஞ்சா எடுக்க மாட்றீயாம்?"
“அது வந்து......"
"பரவாயில்ல விடு....,என்னையும், உ ன் அம்மீயையும் மன்னிச்சுடு, ரொம்ப மன்னிச்சுடு எங்கள!"
"ஐயோ! எதுக்கு வாப்பா, மன்னிப்பெல்லாம் எதுக்கு வாப்பா?"
“இல்ல அபு, நீ நிக்கா இப்ப வேணாம்னு சொல்லியும் உன்ன வற்புருத்துனோம், நீயும் எங்கள மதிச்சு, எங்க மனம் வருந்த கூடாதுன்னு நிக்காக்கு சாின்னுட்ட, உன் மனசுல என்ன இருக்குன்னு தெருஞ்சுக்கலையே, வருத்தமா இருக்கு அபு!"
"என்ன வாப்பா இது? மனசு வருத்தமா இருக்கு, இப்படில்லாம் பேசாதீங்க வாப்பா!"
" அபு நிசமாவே சொல்லு, நீ வேற எந்த பெண்ணையாவது காதலிக்கிறாயா? என்ன உன் நண்பனா நினைச்சுக்க அபு, தப்பா இருந்தா ஸாரி அபூ!"
"ஐயோ வாப்பா, அதெல்லாம் ஒன்னுமில்ல, நான் எந்தப் பெண்ணையும் காதலிக்கல!" அதை சொல்லும் போதே அவன் மனதில் ஏதோ சஞ்சலம், அவனுக்கே அது ஏனென்று தெரியவில்லை.
"சாி அபு எதானாலும் ஆனது ஆயிட்டு, இனி ஆமிரா, உன் மனைவின்றது மாறாது, எனக்குத் தெரியும் அப்படி பேசினது தப்புதான்,இருந்தாலும் அந்தப் பொண்ணும், சின்ன பொண்ணு அபூ ,