நீ அவளை மன்னிச்சு விட்று, நீ வீட்டுக்கு வந்து ஆமிராவோட அன்போட இரு, அவ மாறிடுவா, செய்வியா?"
"பிறகு, உங்க அம்மீகிட்ட பேசு அபு, ரொம்ப மனசு ஒடிஞ்சிருக்காங்க " என்று சொல்லும் போதே அவருக்கு முன் தினம் தன் மனைவி கண்ணீர் விட்டது நினைவு வந்தது , அவர் கண்ணில் அவா் அறியாமலேயே கண்ணீர்.
அதை கண்ட அப்துல பயந்துவிட்டான்...."அம்மீக்கு என்ன ஆச்சு வாப்பா, வீட்ல எல்லாம் சரியாத்தான போகுது, ஆமிரா அம்மீட்ட தகராரு செய்யறாளா?" கோவத்தில் அவன் முகம் சிவந்தது.
அவர், அவனுக்கு தொியாமல் கண்ணை துடைத்துக் கொண்டார். " அதெல்லாம் ஒனனுமில்ல, நீ ஃபோனை எடுக்கல, அதான் அம்மீக்கு வருத்தம், கொஞ்சம் கண்ணீர் விட்டுட்டா. சாி நீ பேசு சரியாகிடுவா, ஆமிராவோடவும் பேசு, என்ன? "
"சாி வாப்பா!" என்றான், ஆனால் மனது பாரமாக இருந்தது, இந்த நிக்காவால யாருக்குமே சந்தோஷமில்லை என்று நினைத்து கொண்டான்.
டிஃபன் வந்தது, இருவரும் சாப்பிட்டனா்.
"வாப்பா, இன்னும் வேற வேலை இருக்கா இங்க?"
"இல்ல அபூ, உனக்கு என்ன வேலை இன்னிக்கு?"
"எனக்கு லாப் இருக்கு, அது வரை உங்க கூட இருக்கேன். நீங்க எப்ப திரும்பனும்?"
"நான் உன்னதான் பாக்க வந்தேன் , மதியம் வண்டில போறன். உனக்கு நான் சொல்ல வேண்டாம், இன்னும் மத்த சடங்கெல்லாம் பாக்கியிருக்கு, நீ வரனும்."
"நான் உடனே திரும்பி வந்ததும் அது ஒரு காரணம், எனக்கு இந்த வருஷம் கடைசி வருஷம், எனக்கு எந்த ஒரு டிஸ்டிராக்ஷனும் இருக்க கூடாது. என் படிப்பில் முழு கவனம் இருக்க வேண்டும், மத்த சடங்கெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்,நான் காலேஜூக்கு போய் கிளாஸஸ் பார்த்துட்டு லீவ் சொல்லிட்டு வரேன்."
அவனே தன் ஏஜன்ட்டை கூப்பிட்டு டிக்கெட் ஏற்பாடு செய்தான்,வாப்பாவை தானே சென்று டிரயின் ஏற்றிவிட்டு வந்தான்.
காலேஜூக்கு போனவுடன் அம்மீக்கு ஃபோன் செய்து பேசினான் தான் சீக்கிரம் ஊருக்கு வருவதாக கூறினான்
இரண்டு நாளில் ஊருக்கு போனான், அம்மீயை தேடி போனான் ,அவர் நமாஸ் செய்து கொண்டிருந்தார் , அதனால் அவர் முடிக்கும் வரை காத்திருந்தான்,நிக்கத் முடித்து நிமிரும்போது தன் மகனை அங்கு பார்த்தவுடன் தான் காண்பது கனவா? "அபு?"
"நான்தான் அம்மீ, கனவில்ல..."என்றான். மென்மையாக சிரித்துக் கொண்டே