அம்மீயை அணைத்துக்க்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். நிக்கத்தின் கண்களில் கண்ணீர் கண்டு இன்னும் இருக்கினான்.
"எல்லாம் சரியாயிடும் அம்மீ, சரி பண்ணிடலாம் ." என்று கூறி அவர் கண்களை துடைத்து விட்டான்
"சரி அம்மீ, நான் போய் ஆமிராவை பார்த்து விட்டு வரேன். " என்று தலையாட்டிவிட்டு, அங்கிருந்து அகன்றான்.
நிக்கத்துக்கு தெரியும் அவள் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டாள் என்று, ஆனால் அதை சொல்லி அவனை நிருத்த விரும்ப வில்லை.
"சரி!" என்று தலை அசைத்து, அவனை அனுப்பி வைத்தார்.
தன் ரூமுக்கு வந்தான், யார் வீட்டுக்குள்ளோ வந்திருந்தது போல் இருந்தது. அவன் மனசு
ஏதோ யாரையோ இழந்த மாதிரி ஒரு ஃபீலிங்.
அவள் துாங்கிக் கொண்டிருந்தாள். அதனால் வெளியே வந்து விட்டான்
"அம்மீ டீ குடுக்கறீங்களா?"
டீ குடித்துவிட்டு தன் லாப்டாப்பில் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்
எட்டு மணி போல் ஆமிரா எழுந்து வந்தாள் வெளியே, அவன், அவள் வருவதை பார்த்து விட்டான் "ஆமிரா, டீ குடிச்சுட்டு வா, கொஞ்சம் பேசனும்."
"ஓஹோ! வந்தாச்சா, என் பேரு கூட தொியுமா? பரவாயில்லையே! என்ன பேசனும் இப்போ, எது வேண்ணாலும் இங்கேயே பேசுங்க.
"
“ உள்ள வந்தா, பேசலாம் , இல்லேன்னா பேச ஒன்னுமில்ல. "
"நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன், இங்க எனக்கு என்ன இருக்கு?"
எப்படியோ, அம்மீக்காக அவளை சமாதானம் செய்து, தன் படிப்பு முடியும் வரை பொருமையாக இருக்க செய்தான்.
எப்படியோ இப்போது இரண்டு குழந்தைகள் ஆயிற்று, ஆனால் அவனுக்கு நிம்மதி இல்லை,
நிமிர்ந்து உட்கார்ந்தான், ஒரு வேளை அப்படி இருக்குமோ?
தன் சின்ன வயதில் தங்கள் கிராமத்து வாழ்க்கையை நினைத்து பார்த்தான்…
" தனம்!”
தனம், படிப்பில் சுட்டி , எப்பவும் அவள்தான் முதல் ராங்க், எவ்வளவு முறை அவளை பீட் பண்ணி தான் முதலில் வர முயற்சி செய்தும் கடைசி வரையில் முடியவில்லை,
அவள் எந்த பையனுடனும் பழக மாட்டாள். பெண்களோடவும் கேட்ட கேள்விக்கு பதில்