(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

தூக்கியெறிஞ்சேன். இந்த இழப்பும் ஏமாற்றமும்  மிகவும் வருத்தமாக இருந்ததுதான். அதைவிட வலிச்சது இந்த போலி அன்புக்காக என் அம்மா, அப்பாவின்  தூய்மையான அன்பையும், என்னோட மரியாதையையும் இழந்ததுதான். இந்த கல்லூரியில் நான்  இங்கே பொறியியல் படிப்பில் சேரும் வரை அம்மா, அப்பா  இருவரும் என்கூட ஒரு வார்த்தை கூட  பேசல. நான் மட்டுமே அவங்ககிட்ட பேசுவேன், ஆனால் அவுங்க ரெண்டுபேரும் எனக்குப் பதில் பேசமாட்டாங்க.. அவர்களுக்குத் திருமணமாகி ஏழு வருட காத்திருப்புக்குப் பிறந்த ஒரே குழந்தை நான். அவ்வளவு அருமையா என்னை வளர்த்தாங்க. ஆனால் நான் காதலித்ததற்காக என்  மீது அவ்வளவு கடுமையாக இருந்தாங்க. அதே மாதிரி உன் அம்மா, அப்பாவும் உன்கிட்ட நடக்கலாம். காதல் வலியை நிறைய வழிகளில் கொண்டு வரும்.. வலியை ஏற்று உன்  காதலுக்காக போராட நீ  தயாரா இருக்கியா? இதயத்தை உடைத்தால் வரும் வலியை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. காலம் காயத்தை வேணா ஆற்றும், அது தந்த வலி நெஞ்சில் இருந்துட்டே தான் இருக்கும் என்று அவளிடம் சொன்னவன், இப்போதும் ப்ரியாவின் நினைவு அவனின் நெஞ்சில் இருப்பதைப் போல, வலி நிறைந்த முகத்தைக் காட்ட, ரம்யாவின் மனமே கனத்து விட்டது. ரம்யா நீ தினேஷின் இதயத்தை ஒருபோதும் உடைத்து விடாதே, உனது காதலில் உறுதியாக இருப்பேன்னு ப்ராமிஸா சொல்லு என்று கேட்கவும், ப்ராமிஸ் அண்ணா என்று அழுத்தமான குரலில் சொன்னாள் ரம்யா.

மூன்றாம் வருடமும் நிறைவாக, விடுமுறையில் ஆளுமை பயிற்சி, மாதிரி வளாக நேர்காணல், என்று ஹாஸ்டலில் அனைவரும் தங்கிப் பயில வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்திச் சொல்லிவிட, வேறு வழியின்றி ஹாஸ்டலில் டே ஸ்காலர்கள் அனைவரும் சேர்ந்தனர். ஹாஸ்டலில் சரியாகச் சாப்பிடாமல் இருந்து  ரம்யா மேலும் மெலியத் தொடங்கினாள். எலிக்குட்டியா இருந்தப்பவே சகிக்கல இன்னும் மெலிஞ்சு எறும்பாகப் போறியான்னு தேவி திட்டிக் கொண்டே இருப்பாள்.

குடும்பம் வளர வேண்டுமென்றால் ஒரு பெண் தான் விளக்கேற்ற வரவேண்டும் என்று நினைக்கும் தினேஷின் உறவினர்கள் அவனது அண்ணன் ராஜேஷுக்குப் பெண் பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்கிறார்கள்.  கல்யாணத்துக்கு அவன் வகுப்பு மாணவ மாணவியர்களை அழைத்துள்ளதால், அவளும் அவர்களுடன் சேர்ந்து வந்து அண்ணனின் திருமணத்தில்  கலந்துகொள்ள வேண்டும் என்று தினேஷ் சொன்னான். ரம்யா அவனுக்கு இளமஞ்சள் நிறத்தில் ஒரு புதிய சட்டையைக் கொடுத்து, அண்ணணின் திருமணத்திற்கு அவன் அணிந்து கொள்வதற்காக வாங்கியதாக அவனிடம் கொடுத்தாள். அவள் வாங்கிக் கொடுத்ததல்லவா, அந்த உடையைத் தான் அணிவான் என்று அவளுக்குத் தெரியும். அதே

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

6 comments

  • சில சமயங்களில் ரத்த உறவில்லா உடன்பிறக்காத சகோதர சகோதரிகள் பெரும்பாசக்காரர்களாய் கல்லூரியில் கிடைப்பார்கள் :-) நன்றி தோழி
  • Cho pavam Ranjan...but own brother pole nalla care edukuraru 👍 veedu katta planning ellam amogama pogudhu pole 😁😜 nice update ma'am 👏👏👏👏👏<br />Ethanai kalam than ivanga ippadi hide n seek game adittu iruka poranga....aunty kk matter therinja Saroja saman nikalo....than :grin: <br /><br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.