சந்தோஷப் படவில்லை. மாறி, பொறாமை பட்டாள்.
"என்ன பார்வதி இது நிசம்மாவே தனக்கா வீடா? இவ்வ்ளோ நல்ல வீட்டை வச்சுண்டு நம்ம பழைய வீட்டு மேலயும் ஆசை பாரு எல்லாம் பேராசை. "
"அப்படியா வள்ளி! அப்போ ஒனக்கு இருக்கற ஆசை என்ன சின்ன ஆசையா? தனம்க்கா சம்பாரிச்ச பணத்துல ஒனக்கு கல்யாணம் செய்ஞ்சு வக்கனும், ஆனா அவங்க தனக்கு ஒரு கல்யாணம் செய்ஞ்சுக்காம அவங்க ஃபிளாட்டை கொடுத்து நம்ம இங்க குடி வக்கனும், ஆனா அவங்களுக்கு வீடு கொடுக்க கூடாது. அவங்க பணம் செலவாகலாம், ஆனா நம்ம பணம் செலவாக கூடாது. நமக்கு சின்ன ஆசை அக்காக்கு பேராசை." அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது தனம் உள்ளே வந்தாள்.
"அக்கா ஏதாவது ஹெல்ப் வேனுமா செய்யட்டுமா?" பார்வதி கேட்க,
"அதெல்லாம் ஓன்னும் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் இந்த ரூமிலே தங்கிக்கோங்க ரெண்டு கட்டில் இருக்கு பார். உங்க ரெண்டு பேருக்கும் சரியா இருக்கும் "
"சரிக்கா, ஆனா எப்படிக்கா கட்டில் எல்லாம் போட்டு ரெடியா வச்சிருக்க?" என்று பார்வதி கேட்க,
"அதுவா, இங்கிருந்தப்ப நான் தனி ஆள், எனக்கு இவ்வளவு பெரிய பிளாட் தேவையில்ல, அப்போ எங்க ஆபிஸ்ல நிறைய பெண்கள் வெளியூரிலிருந்து வேலைக்கு வருவாங்க அவங்களுக்கு நம்பிக்கையான இடம் தேவை பட்டது, அப்பதான் இங்க கட்டில் வாங்கி போட்டு அவங்கள தங்க வச்சுண்டேன். எனக்கு துணைக்கு துணையும் ஆச்சு, பணம் எக்ஸ்டராவும் வந்தது அதையும் சேர்த்து சீக்கிரம் லோனை அடைச்சுட்டேன். "
வள்ளி தன் மனதுக்குள் 'என்ன திமிர் பார் வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாரிச்சு வீட்டு லோனை சீக்கிரமே கட்டிட்டேன்னு பெருமை பேசறதை, ' பேசிக் கொண்டிருந்தாள்.
அது புரிந்தது போல் "பார்வதி நம்ம உழைச்சும் நேர்மையாவும் சம்பாதிக்கனும், வாடகைக்கு விட்டு சம்பாதிக்கணும்னு நான் விடல, ஆனா அந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கும், யாருக்குமே எதுவுமே இரவலா செய்தால் அதற்கு மதிப்பிருக்காது. அது யாரா இருந்தாலும், அதில் எந்த தப்புமில்ல, எனக்கும் பணம் ஒன்னும் மரத்திலிருந்து உதிரல உழைச்சு சம்பாரிச்சாதான் இந்த பணம். இரவு பகல்னு பாக்காம உழைச்ச பணம்தான் இதெல்லாம், நீங்க நினைக்கலாம் இவளுக்கென்ன பணம் இருக்கே ஏன் வீட்டை கேக்கறான்னு?"
"இல்லக்கா நாங்க அப்படிலாம் நினைக்கல!" பார்வதித்தான் கூறினாள்.
"இல்ல நீங்க நினைச்சாலும் நினைக்கலேன்னாலும் நான் சொல்றேன், அது மட்டுமில்ல நான் வீட்டை விட்டு வரச்சே நீங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க, நான் உங்களோட ரொம்ப பழகல எனக்கு உங்களை பத்தி ரொம்ப தெரியாது இருந்தாலும் சொல்றேன், எனக்கு அந்த வீட்டை