(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அது புரிஞ்சுது ஆனா எப்படியும் பிற்காலத்துல இந்த வீடு உங்களுக்குத்தான் அதான் சொல்றேன்! "

'இல்லம்மா நான் சொல்ற மாதிரி செய்ஞ்சா உங்களுக்கு நல்லது. அப்புறம் உங்க இஷ்டம், நீங்க சென்னைக்கு வாங்க, ஆண்ட்டி சொன்ன வரன பேசுவோம், ஒத்து வந்தா பிறகு நீங்க முடிவு பண்ணுங்க எப்படி பண்ணணோம்னு. "

"சரிம்மா இதை கண்டிப்பா வள்ளி கிட்டயும் பார்வதி கிட்டயும் சொல்லனும், அவங்க என்ன சொல்லுவாங்கன்னு தெரியல ?"

"அவங்களோட நீ தான் டீல் பண்ணனும்!"

"நீ பணக்காரி உனக்கு என்ன பணத்துக்கு குறைச்சல், நீ உன் தங்கச்சிக்களுக்கு கல்யாணம் பண்ண முடியாதா ?"

"ஏன் முடியாது கண்டிப்பா பண்ண முடியும், ஆனா நான் பேசறது வேற.

உங்க வயசான காலத்துக்கு வேண்டிய பொருளாதாரம்... இதை இந்த பெண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணிகொடுத்து, இந்த வீட்டில் பங்கும் கொடுத்து நீங்க உங்க கவுரவுத்த விட்டுட்டு இன்னொருத்தர் கிட்ட ஹெல்ப் கேக்கறதா சொல்லு அது பெண்ணானாலும், பிள்ளையானாலும் சரி எதுக்கு அடுத்தவங்ககிட்ட நீங்க ஹெல்ப் கேக்கணும்? சரி இப்போ நான் வரலேன்னா என்ன செய்ஞ்சிருப்பீங்க சொல்லு, இதெல்லாம் ஒவ்வொருத்தரும் எப்படி வாழணும்னு வழி வகுத்துக்கணும். தங்கச்சிகளையும் சேர்த்துதான் சொல்றேன், கல்யாணமானாலும் நமக்கு வேண்டியதை நாமதான் செய்ஞ்சுக்கணும். அப்பதான் எங்கயும் மரியாதை. "

"சுத்தி வளைச்சு நீ முடியாதுன்னு சொல்ற அப்படித்தானா?"

"அப்படின்னா அப்படித்தான், நான் சொன்னதை புரிஞ்சிக்காம இல்லை, இந்த வீட்டை என் பேர்ல எழுதி வைக்க உங்களுக்கு இஷ்டமில்லை. எனக்குதான் வைக்கணும்னு நான் சொல்லல, நீங்களே என்ன வேணாலும் செய்ஞ்சுக்குங்க, இதுக்கு மேல உங்களுக்கு அட்வைஸ் கொடுக்க எனக்கு தெரியல! "

சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்று விட்டாள்.

அவள் பின்னாடியே போன அவள் அம்மா தன் இரு பெண்களை சமையல் அறையில் வர சொல்லி அங்கே  அவர்களிடம் தனம் கூறியதை கூறினாள்.

"என்னம்மா, என்ன சொல்ற அக்காவா இப்படியெல்லாம் சொன்னா, அவ கல்யாணமே ஆகாத பிள்ளையை பெத்தவ அவளுக்கு எவ்வளவு திமிரு பார், இந்த வீட்டை அவ அபகரிக்க முடிவு

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.