அங்கிருந்து நகர்ந்தாள்.
அவனும் புன்னகைத்து, "யு ஆர் வெரி ஸ்வீட் மை டியர் தனம்"
என்றான். அவள் காதில் விழுமாறு சத்தமாக .
"தேங்க்ஸ் ஆதூ!"
அப்துலுடைய போன் மணி அடித்தது, அவன் எடுத்து பேசினான்
"சொல்லுங்க அம்மீ"
"...."
"என்ன அம்மீ சொல்லறீங்க?"
"....."
"நான்தான் அவங்கள வரவேணாம்னு சொன்னேனே நேத்து நைட், பிறகு ஏன் வந்தார்களாம்?"
"நேத்து உனக்கு போன் செய்ஞ்சாங்களா, எப்ப? நீ என்ன சொன்ன?"
"நைட் போன் செய்ஞ்சு ஏதோ பொண்ணு அப்படி இப்படின்னு சொன்னாங்க, எனக்கு கோவம் வந்தது, நானும் நீங்க பொண்ணுனெல்லாம் பேசிட்டு வராதீங்க எனக்கு பொண்ணெல்லாம் பார்த்து நிக்காவும் முடிச்சிடுத்துன்னு சொல்லிட்டேன், திரும்பவும் எதுக்கு வந்திருக்காங்க?"
"அது எப்படியிருந்தாலும் சரி இப்ப வந்துட்டாங்க, உன்ன பார்த்தே ஆகணும்னு உக்காந்திருக்காங்க நீ கிளம்பி வா!"
"அம்மீ நான் ஆபிசுக்கு போகணும் இப்ப டைம் ஆயிடுத்து என்னால வரமுடியாது அம்மீ, இவங்களுக்காகல்லாம் என்னால வரமுடியாது அவங்க யாரையும் எனக்கு பார்க்கவே பிடிக்கல."
இப்ப வேற வழியே இல்ல நீ வந்துடு இல்லன்னா பெரிய பிரச்சனைஆயிடும் அபூ.”
என்ன அம்மி நான் சொல்லிட்டிருக்கேன் நான் வேலைக்கு போகனுனோம், சரி நான் வரேன்.” ஃபோனை வைத்து விட்டு,
“தனம் …..”
“என்ன ஆதூ?”
“தனம், அது வந்து…..” எப்படி சொல்வது என்று யோசித்தான்.
அந்த நேரம் அஜய், ஜாஃபரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அங்கு சென்றான்.
வாசல் கதவு திறந்திருந்தது, உள்ளே நுழைந்த அஜய் அங்கே நின்றிருந்த நிக்கத்தை பார்த்தான், “ ஹலோ பாட்டிம்மா….”
நிக்கத் ஷாக்கில் இருந்தார் அவனையே பார்த்துக் கொண்டு. “ என்ன பாட்டிம்மா உங்களுக்கு