(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அபூ கிட்ட சொன்னா உடனே ஓடிடுவான் அவங்கள என்ன செய்யறேன் பாருன்னு.."

"அல்லா பார்த்துட்டுதானே இருந்திருக்கார். அவர், அவங்களுக்கு தண்டனை கொடுப்பார் ராஜா, நீ வருத்தப் படாதம்மா."

"மாஸ்டர், அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நாள் வேற எங்கயாவது போயிருக்கட்டும், இல்லேன்னா அவங்க டிரான்ஸ்பர் வாங்கிட்டு போகட்டும். அம்மா இப்ப இருக்கற நிலையில,  அவங்க இங்க இருக்க வேணாம்னு பாக்கறேன், நீங்க என்ன சொல்றீங்க?"

"நீ சொல்றதும் சரிதான், " என்று கூறி நிக்கத்தை பார்த்தார்.

"எங்கய்யா அனுப்பப்போறே, இப்பத்தான் எல்லாம் ஒண்ணா சேர்ந்திருக்கீங்க, உடனே எல்லாரும் பிரிஞ்சா எப்படிப்பா, நீ எப்படி அம்மீயையும், வாப்பாவையும் பிரிஞ்சிருப்ப?"

அவன் கண்ணில் நீர் தளும்ப "அவங்க என்னோட இல்லாட்டியும், எங்கயோ நல்லா இருப்பாங்க பாட்டிம்மா, இங்கேயிருந்தா, அவங்க ....." என்று குலுக்கினான்.

 "இன்னிக்கு அவங்க கையில பாய்ஞ்ச கத்தி அவங்க இதயத்துல பாய்ஞ்சிருந்தா? நினைச்சே பார்க்கமுடியாதே, மாஸ்டர்!" என்று குலுக்கினான் .

அவனை இருவரும் அனைத்துக் கொண்டார்கள்.

"அபூகிட்ட அவ்ளோ தைரியமா பேசினேயேய்யா ? இப்போ இப்படி கலங்கரியே?"

"பாட்டிம்மா, அப்பா எதிரே நானும் கலங்கியிருந்தா அவர் ஒடிஞ்சே போயிருப்பார், அம்மாமேல உயிரையே வச்சிருக்கார், அதனாலதான் நான் தைரியமா இருக்கா மாதிரி காட்டிக்கிட்டேன். யாரோ ஒருத்தர் கோபத்துக்கு ஒரு உயிரா பாட்டிம்மா? அதுவும் ஒண்ணுமே தெரியாத எங்கம்மாவை.... ச்சே.. இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா மாஸ்டர்?"

"ரொம்ப சரியா சொன்ன அஜய், மனசாட்சியே கிடையாது இவர்களுக்கெல்லாம்... நானும் ஒரு சந்தேகமாத்தான் சொல்றேன், உறுதியா சொல்லல.."

அவன் சிறிது நேரம் யோசித்தான், அப்போது அப்துல் வருவது தெரிந்தது. அதுக்குள்ளே அப்பா வந்துட்டாரு!" ஜாஃபரிடம் கூறினான்.

அப்போது தான் நர்ஸ், "அவங்க கண் முழிச்சுட்டாங்க, அவங்கள ரொம்ப தொந்தரவு பண்ணாம போய் பார்த்துட்டு வர சொன்னாங்க டாக்டர், "என்றாள்.

அஜய்தான், "முதல்ல அப்பா போய் பார்க்கட்டும் மாஸ்டர்!" என்றான்.

"அதான் சரியானது, நீயும் போயேன் ராஜா! " என்றார்.

"இல்ல மாஸ்டர்! அப்பா போகட்டும் இப்போ இந்த சந்தர்ப்பத்துல அப்பா போய் பார்த்து பேசிட்டு வரட்டும் ,அப்புறம் நாம எல்லாரும் போய் பார்க்கலாம், " என்றான் .

அப்துல் உள்ளே நுழைந்தான், தனம் வலியில் இருந்தாள்."ஆதூ! " என்று கண்ணீர் வடித்தாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.