அமர்ந்து கொண்டார்.
”அட் எனி காஸ்ட்...இந்தப் பிரச்சினைகளிலிருந்து சீக்கிரமே விடுபடணும்!” அவர் மனம் எண்ணியது.
சரியாக இருபதாவது நிமிடம் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விக்டரி விஸ்வநாத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பத்தை ஐந்து வயதிருக்கும். தலையில் ஒரு வெள்ளை முடி கூட இல்லாமல் சுத்தமாய்க் கருப்படித்திருந்தார். கண்களில் தங்க பிரேமிடப்பட்ட கண்ணாடி. ஒல்லியான உடல்வாகுதான் என்றாலும் எக்ஸர்சைஸ் செய்து டிரிம்மாக வைத்திருந்தார்.
வந்தவர் சாம்பசிவத்திற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து “கமான் டெல் மீ...வாட்ஸ் யுவர் பிராப்ளம்?” என்று ஆரம்பிக்க
“ஜஸ்ட் வெய்ட்...காபி சொல்லியிருக்கேன்...அது வந்ததும் குடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்!” என்றார் சாம்பசிவம்.
“நோ...நோ...அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?...அது பாட்டுக்கு அது...இது பாட்டுக்கு இது!...சொல்லுங்க...என்ன பிரச்சினை?”
செக்யூரிட்டிகளின் மர்மச்சாவில் ஆரம்பித்து, அட்வென்சர் தேடி வந்த முகிலனின் அகோரச் சாவை விவரித்து கடைசியில் சுவற்றிற்குள்ளிருந்த பிணங்களில் முடித்த சாம்பசிவம்
“எனக்கு எதை நம்புறது...எதை நம்ப வேண்டாம்!” ன்னே புரியலை விஸ்வநாத்...ஆவிங்கறாங்க...பேய்ங்கறாங்க...என்னப்பா இது இந்தக் காலத்துல அதெல்லாம் இருக்கா என்ன?” என்று விக்டரி விஸ்வநாத்தைப் பார்த்து அவர் கேட்க
சில நிமிடங்கள் சாம்பசிவத்தின் முகத்தையே கூர்ந்து பார்த்த விக்டரி விஸ்வநாத்
“நான் ஒண்ணு சொல்வேன்...தயவு செய்து என்னை தப்பா நினைக்கக் கூடாது!” என்று பீடிகை போட
“சொல்லுங்க மிஸ்டர்...உங்க அட்வைஸ் வேணுமின்னுதானே உங்களையே கூப்பிட்டிருக்கேன்...அப்புறம் எப்படி தப்பா நினைப்பேன்?...தாராளமாய்ச் சொல்லுங்க!” சாம்பசிவம் தன் ஒப்புதலை தந்தார்.
“வந்து...எனக்கென்னமோ...இத்தனை மனக் கிலேசத்துடன் தொடர்ந்து நீங்க இந்தக் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தை மெயிண்டெய்ன் பண்ணுறது...அவ்வளவு சரியாய்ப் படலை!...பெட்டர்...இதைக் கை மாத்தி விட்டுட்டு...வேறு எங்காவது...வேறு காம்ப்ளக்ஸ் பில்டிங் இருந்தா அதை வாங்கி அதை மெயிண்டெய்ன் பண்ணுங்க!...சைக்காலஜிக்காவே யூ வில் கெட் ரிலீஃப்” தன் அறிவுரையை அந்த விக்டரி விஸ்வநாத் தெளிவாகச் சொல்ல
“அதிலேயும் ஒரு பிரச்சினை இருக்கு விஸ்வநாத்!...இந்தக் காம்ப்ளக்ஸ்ல நடந்த