முகம் சுளித்தார் சாம்பசிவம். “அதுக்காக நாம என்ன புரோக்கர் வேலையா பார்க்க முடியும்?”
“நோ...நோ..நாட் லைக் தட்!...அதுக்குள்ள உள்ள ஆட்களை லிங்க் பண்ணி விட்டுட வேண்டியதுதான் நம்ம வேலை!”
சில நிமிடங்கள் மௌனமாய் யோசித்த சாம்பசிவம் “ஓ.கே!...அதைப் பத்தி பின்னாடி பேசுவோம்!...மொதல்ல அந்த ஆளைப் போய்ப் பார்த்திட்டு வந்துடுவோம்!” என்றார்.
“ஓ.கே!”என்று தோள்களைக் குலுக்கிய விஸ்வநாத், “நாளைக்கு ஈவினிங் குட்லக் கிளப்பிற்கு வந்திடுங்க!...அங்கதான் அவர் வரச் சொல்லியிருக்கார்!”
“ம்ம்...வந்திடறேன்!”
“அப்ப நான் கிளம்பறேன்!...நீங்க கண்டதையும் நெனச்சு நெனச்சு மனசைக் குழப்பிக்காதீங்க!...எல்லாம் நல்ல விதமாய் முடியும்!” என்று சொல்லி விட்டுச் சென்ற அந்த விக்டர் விஸ்வநாத் அன்று இரவே சாம்பசிவத்தை அழைத்து
“சாம்பசிவம் சார்!...அந்த தேவநாதனுக்கு நாளைக்கு ஈவினிங் வேற ஏதோ எங்கேஜ்மெண்ட் வந்திடுச்சாம்...அதனால நாளைக்கு மதியம் ரேஸ் கோர்ஸ் ஏரியாவிற்கு வருவாராம்...அப்ப உங்க ஆபீஸுக்கே வந்து உங்களை மீட் பண்றேன்னு சொல்றான்...என்ன சொல்றீங்க?... “சரி”ன்னு சொல்லிடவா?”
“நீங்கதான் சொல்லணும்!...எனக்கு எப்படித் தெரியும்?” சாம்பசிவம் திருப்பிக் கேட்க
“அப்படியா?..அப்ப...“சரி”ன்னு சொல்லிடறேன்!...அவன் வர்ற அதே நேரத்துக்கு நானும் உங்க ஆபீஸுக்கு வந்திடறேன்!...ஓ.கே.வா?”
“ஓ.கே!..ஓ.கே!”
தொடரும்...
Next episode will be published on 25th May. This series is updated weekly on Tuesdays.