தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 17 - முகில் தினகரன்
காலை மணி பத்தரை இருக்கும்.
சோர்ந்து போன முகத்தோடு தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார் சாம்பசிவம். கடந்த காலங்களில் அவருடைய அந்தக் காம்ப்ளக்ஸில் நிகழ்ந்து போன அமங்கல நிகழ்வுகள் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியதோடல்லாது மன நிம்மதியையும் முற்றிலுமாய் குலைத்திருந்தன.
இது போன்ற நேரங்களில் அவர் தனது ஆலோசகர் விக்டரி விஸ்வநாத்தை அழைத்து அவரிடம்தான் ஆலோசனை கேட்பார். இன்றும் அதையே செய்ய நினைத்தவர் தனது பிரத்யேக மொபைலை எடுத்து விக்டரி விஸ்வநாத்தின் எண்ணுக்கு டயல் செய்தார்.
எதிர் முனையில் “முருகா என்றழைக்கவா?..முத்துக்குமரா என்றழைக்கவா?” என்ற பக்திப் பாடல் காலர் டியூனாக ஒலித்தது.
சில விநாடிகளுக்குப் பிறகு லைனில் வந்த விக்டரி விஸ்வநாத், “ஹலோ...மிஸ்டர் சாம்பசிவம்...எப்படி இருக்கீங்க?...எங்களையெல்லாம் சுத்தமா மறந்தே போயிட்டீங்க போலிருக்கு!” என்று அவர் தமாஷாய்க் கேட்க
“அப்படியெல்லாம் இல்லை விஸ்வநாத்...கொஞ்சம் பிஸி..அவ்வளவுதான்!...வந்து ஒரு சின்ன பிராப்ளம்...இல்லை...இல்லை...பெரிய பிராப்ளம்!...எனக்கு கொஞ்சம் கவுன்சிலிங் தேவைப் படுது...என்னோட காம்ப்ளக்ஸ் ஆபீஸுக்கு வரமுடியுமா?”
சாம்பசிவத்தின் குரலில் தெரிந்த பதட்டத்தை வைத்தே அவரது மனநிலையை ஓரளவிற்கு யூகித்த விக்டரி விஸ்வநாத்,
“இப்பக் கூட நான் கொஞ்சம் ஃப்ரியாத்தான் இருக்கேன்!...நீங்க ஓ.கே.சொன்னா நான் இன்னும் இருபது நிமிடத்துல அங்க இருப்பேன்!”
“ப்ளீஸ் கம் சார்” என்று சொல்லி போன் இணைப்பத் துண்டித்த சாம்பசிவம், காம்ப்ளக்ஸ் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜர் கல்பனாவை அழைத்தார்.
“யெஸ் சார்!” என்றபடி நாசூக்காய் எம்.டி.அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கல்பனாவிடம்
“ம்ம்ம்...கல்பனா...இன்னும் சிறிது நேரத்துல விக்டரி விஸ்வநாத் இங்க வரப் போறார்!..அவர் கூட நான் கொஞ்சம் பர்ஸனலா பேச வேண்டியிருப்பதால்...எனக்கு எந்த போன் கால்ஸையும் குடுக்க வேண்டாம்!...அதே மாதிரி விசிட்டர்ஸ் யாரையும் என்னைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம்!...அப்புறம் அவர் வந்ததும்..ரூமுக்கு ரெண்டு அண்ணபூர்ணா காஃபி அனுப்பிடு...என்ன?”
“ஓ.கே.சார்!” என்றபடி அவள் வெளியேறியதும், சாய்வு நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து