புரிந்துகொண்டான் ஜனா. ஆனாலும் நிமிர்ந்து பார்க்காமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தான்.
இவரை எப்படி கூப்பிடுவது என்று யோசித்த ஜனனி எதற்கு வம்பு என்று நினைத்தவாறு எதுவுமே பேசாமல் போகலாமா என்றாள்.
போகலாமா...வா... எங்கே என்றான் ஜனா.
சாப்பிட வெளியே போகலாம் என்று சொல்லியிருந்தேனே என்று மெதுவாக இழுத்தாள் ஜனனி.
ஞாபகம் இருந்தது. இருந்தாலும் ஞாபகம் இல்லாதது போல காட்டிக் கொண்டான் ஜனா. ஓ... சாரி... மறந்துட்டேன். சாப்பாடு ஆர்டர் பண்றேன். வாங்கிக்கொண்டு வந்துருவாங்க. கேபின்லயே சாப்பிட்டு விடலாம் என்று சொல்லி அவன் மீண்டும் தன் வேலையில் கவனத்தை பதித்தான். இல்லை இல்லை பதிப்பது போல நடித்தான்...
இது வேலைக்காகாது போலயே என்று யோசித்த ஜனனி அங்கேயே அமர்ந்து கொண்டாள்.
ஓரிரு நிமிடங்கள் பொறுத்து பார்த்தவள் ஜனா வேலையிலேயே கவனமாக இருப்பதை உணர்ந்ததும் வேகமாக எழுந்தாள்.ஞாபகம் இருந்தும் ஞாபகம் இல்லாதது போல நடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஜனனி வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் சென்ற வேகத்தை பார்த்ததும் அச்சச்சோ... அப்போ இங்கே சாப்பாட்டை வர வைக்க வேண்டிய தானா... அவளோட தனியாக ஹோட்டல் போற சான்சை மிஸ் பண்ணிட்டியேடா ஜனா என்று அவன் மனம் கிண்டல் செய்ய போச்சுடா என்ற பாவமாக ஒரு லுக் விட்டான்.
ஓவரா சீன் போட்டு டெமோ காட்டி கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணிட்டேனே... இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசிக்கு மெசேஜ் வந்தது என்பதை தெரிவிக்கும் விதமாக ஒலி எழுப்பியது.
மெசேஜ் ஒலியைக் கேட்டதும் ஒரு வேளை ஜனனி தான் மெசேஜ் அனுப்பி இருப்பாளோ போகலாமான்னு கேட்கிறதுக்கு.... நேரில் கேட்க பயந்து மெசேஜ்ல கேட்கிறாளோ என்று ஒருவித ஆர்வத்துடன் வேகமாக மொபைலை எடுத்து பார்த்தவன் ச்சே... என்று அலுத்துக் கொண்டான். ஏனெனில் வந்தது வேறு மெசேஜ்.
ஆனால் அடுத்த நொடியே அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பது ஜனனி தான் என்று தெரிந்ததும் சற்று தாமதித்து அட்டன் செய்தான்.
ம்ம்... சொல்லு என்று இயல்பாகப் பேசுவது போல் காட்டிக் கொண்டாலும் அவன் குரலில் இருந்த பரபரப்பு ஜனனிக்கு சிரிப்பை வரவழைத்தது. எவ்வளவு நேரம்தான் காருக்கு வெளியிலேயே இருக்கிறது. சீக்கிரமா வாங்க என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அவன் எதிர்பார்த்தது நடந்துவிட்டது என்ற குதுகலத்துடன் நமட்டு சிரிப்பு சிரித்த அவன் தன்