(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“ம்ம்ம்...கோயமுத்தூரில் இருக்கான்”

“அப்ப...நான் உங்க கூட கோயமுத்தூர் வந்தா அவனைப் பார்க்கலாமா?” பரபரப்பாய்க் கேட்டான்.

“உன்னால் வர முடியுமா?” திருப்பிக் கேட்டார் தங்கவேலு.

“நிச்சயம்...இப்பவே...இப்படியே கூட வரத் தயார்” குதூகலமாய்ச் சொன்னான்.

“முன்னாடி நிற்குதே உன் பைக் அதை என்ன செய்யறது?...இப்படியே இந்த ரோட்டிலேயே விட்டுட்டுப் போயிடறதா?” தமாஷாய்க் கேட்டார்.

“ம்ம்ம்...உங்க லாரில போட்டுக்கலாம்” என்றான் தனசேகர்.

“லாரில போட்டு?...கோயமுத்தூருக்கே கொண்டு போயிடலாம்!கறியா?”

“ஆமாம் சார்” என்ற தனசேகர் அடுத்த நிமிடமே கேபினிலிருந்து குதித்திறங்கி தன் பைக்கை லாரிக்குப் பின் புறம் கொண்டு போனான்.

அவனது ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட தங்கவேலு, “இருப்பா...உன் ஒருவனால் மேலே ஏத்த முடியாது...நானும் வர்றேன்” என்று சொல்லி தானும் கிழிறங்கி லாரிக்குப் பின் புறம் வந்தார்.

இருவரும் சேர்ந்து பைக்கை லாரியின் பின் புறத்தில் ஏற்றி, ஓடும் போது அது விழாத வண்ணம் ஒரு கயிற்றால் கட்டினர்.

“ஏம்ப்பா....நீ பாட்டுக்கு இப்படியே கிளம்பறியே?...உன் வீட்டுல தேட மாட்டாங்களா?” தங்கவேலு கேட்க,

“அவங்க தேடிட்டுப் போறாங்க....நீங்க வண்டியை எடுங்க சார்!” வெகு அலட்சியமாய்ச் சொன்னான் தனசேகர்.

நண்பனைக் காணப் போகும் சந்தோஷம் அவன் முகத்தில் ஆடி மாதக் காவேரியாய் கரை புரண்டோடியது.

தொடரும்

Go to Kai kortha priyangal story main page

One comment

  • wow nice & cute epi.hey irandu perum seraporanga :grin: :dance: :D eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.