கவனித்திருப்பானே என மனம் சந்தேகிக்க.
அவள் பார்வை உணர்ந்தவனாக “உங்க கையில பிளேட் இல்ல . . அதான் கேட்டேன்” என்றான். மனதினுள் “சொதப்பிட்டியே ராசா” என கடிந்தான்.
“பசி இல்ல” என்றவள் “சரி என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்ல?” என்றாள்.
“என்ன கேள்வி?” என யோசித்து தன்னுள் உரையாடலை ரீவைண்ட் செய்தான். அவள் உதட்டில் புன்னகை ஒட்டியிருக்க கைகளைக் கட்டியபடி அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
“நீங்க இங்க?” என அவள் கேட்ட முதல் கேள்வி நினைவுக்கு வர அதற்கு பதிலாக “இந்த படத்துல நானும் வொர்க் பண்ணிருக்கேன்” என்றான்.
“வாவ்! … நீங்க டைரக்டரா?” என பார்வை அகலமாக அவள் கேட்கவும்.
திடுக்கிட்டு “ஏங்க என் பொழப்புல மண்ணை போடுறீங்க?” என அக்கம்பக்கம் திரும்பி அருகே தங்கள் சம்பாஷணையை யாரேனும் கவனிக்கிறார்களா எனப் பார்த்தான். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை.
“மிஸ்டர் ராவ்தான் டைரக்டர்” என்றான் அவசரமாக
“ராகவ் இந்த படத்தோட சீ.ஜி. ஆா்டிஸ்ட்” என முன்னே வந்தாள் கயல்.
“ சீ.ஜி.” பத்மினி முகத்தில் சிந்தனை ரேகை படர
“அதாங்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்”கயல் சொல்ல
“ஐ.சீ” இது பத்மினி
“யூ.சீ? அதாவது படம் பார்த்தீங்களா? பிரிவியூ தேட்டர்ல போட்டாங்க” கயல் கேட்க
புன்னகையுடன் “பார்த்தேன். நல்லா இருக்கு” என்றாள்
“இது சாமி படம் இல்லயா? கடைசில அம்மனுக்கும் ராட்டசனுக்கும் சண்டை வருமே அதை கம்ப்யூட்டர்ல வடிவமைச்சது ராகவ் தான்” கயல் முடித்தாள்.
“உங்க வொர்க் நல்லா இருக்கு ராகவன்” பத்மினி சொல்ல குளிர்ந்துப் போனான் நம்ம ஹீரோ.
“நீங்க யாரு?” பத்மினி கயலை கேட்டாள்.
“இவ கயல் என் பிரெண்ட் . . இந்த படத்தோட காஸ்ட்யூம் டிசைனர்” முந்தினான் ராகவன்.
சொல்லிவிட்டு தன் தட்டிலிருந்து பாஸ்தாவை போர்க்கில் குத்தி எடுத்து சாப்பிட்டான். கயலும் அவன் தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டபடி “பிரெண்டா? அன்னிக்க வேற மாதிரி சொன்னியே ராகவ்” என கேட்டாள்.
இந்த காட்சியைக் கண்ட பத்மினிக்குள் ஏனோ மனதின் ஓரத்தில் சஞ்சலம்.
“என்ன சொன்னேன்?” அப்பாவியாய் ராகவன் கேட்டான்.