“அன்னிக்கு நீ தான் என் வாழ்க்கையின் களங்கரைவிளக்கம்னு சொன்ன” கயல் சொல்ல
“உண்மைதான்” என்றான்
“நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனு சொன்ன” கயல் கேட்க
“யெஸ்” என உணவை மென்றபடி சொன்னான்.
“நீ இல்லைனா என் உயிர் இல்லனு சொன்ன” மீண்டுமாய் கயல்
“அடாடா . . . எல்லா உண்மைதான்” ராகவன்
இதற்கு மேல் பொறுக்க இயலாமல் பத்மினி “எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்றாள்.
“இருங்க பத்மினி . . . எங்க முழுகதையைக் கேட்காம போனா எப்படி?” கயல் அவளை தடுக்க
பத்மினி செய்வதறியாமல் தடுமாறினாள்.
மீண்டும் ராகவனிடம் “நீதான் என் தங்கைனு சொன்னியே” எனக் கயல் கேட்க
“உண்மை உண்மை உண்மை நீதான் என் வாலு தங்கச்சி” என நிதானமாக அவன் சிரித்தபடி கூறினான்.
இதைக் கேட்டதும் பத்மினிக்குள் நிம்மதி பெருமூச்சு. “ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்” என தனக்குள் குழம்பினாள்.
“நான் சினி பீல்டுல நுழைய காரணமே கயல்தான்” என ராகவன் நன்றியுடன் அவளை பார்த்தான்.
“எங்க முதல் சந்திப்பே விசித்திரமானது. சொல்லட்டுமா?” என்ற கயல் தொடர்ந்து “இப்ப உங்க மனக்கண்ணுல கொசுவர்த்தி சுருள் தெரியணும் பத்மினி”
“என்ன?” வியப்பு மேலிட பத்மினி கேட்டாள்.
“அட சினிமால பிளாஷ்பேக் சொன்னா . . . சுருள் சுருளா வரும்ல அதான்”
விரிந்த புன்னகையுடன் “ஓ. . . ஒகே ஒகே” என தலையாட்டி அவர்கள் சொல்லப் போவதை கேட்க ஆர்வமானாள் பத்மினி.
தட்டில் சுவையான உணவை கொண்டு வந்துக் கொடுத்த ராகவன்“கதை கேட்டுகிட்டே சாப்பிடலாம்” என்றபடி பத்மினியிடம் நீட்டினான்.
மறுக்கமுடியாமல் வாங்கிக் கொண்டாள். கதை கேட்கவும் ஆர்வமானாள்.
கண்டுகொண்டேன் . . கண்டுகொண்டேன் . . .