“நான் வேணா கூப்பிடவா?” என்ற கயல் சட்டென “ மிஸ் கிரீன் சாரி” என மெல்ல “மிஸ்டர் சந்திரமௌலி” ரேஞ்சுக்கு கூப்பிட்டுவிட்டாள்.
ராகவனுக்கு இதயமே நின்றுவிடும் போல ஆகிவிட்டது “அம்மா தாயே நீ சும்மா இருந்தா அதே போதும்” என கயலிடம் கடுகடுத்தான். ஒரு நிமிடம் அவன் இதயம் தாறுமாறாய் குதித்து நாகர்கோவில் வரை சென்றுவிட்டது.
அதற்குள் டைரக்டர் ராவ் தன் குரலை மெல்ல கனத்து “மே ஐ ஹேவ் யூவர் அடேன்ஷன் ப்ளீஸ்” எனச் சொல்லவும். அனைவரும் அமைதியாக அவர் பக்கம் நோக்கினார்கள்.
“நம்ம படம் அடுத்த மாசம் 14 ரிலீஸ்” என அவர் சொன்னதும் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். ஒருசில நொடிகளில் சத்தம் ஒய்ந்ததும்
“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நம்ம படம் மேல கேஸ் பைல் ஆனது. நம்ம கதையை திருட்டு கதைனு மகேஷ் கேஸ் போட்டிருந்தான்” என தெலுங்கு வாடை ஆங்காங்கே வீச சொன்னார்.
மௌனமாய் அனைவரும் கவனித்தனர். ராவ் பத்மினியை தன் அருகே அழைத்தார்.
“இவங்கதான் அட்வகேட் மிஸ்.பத்மினி” என்றதும்
பத்மினி அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் தெரிவித்தாள்.
“பத்மினி மேடம் நம்ம கேசை ஜெயிச்சுக் கொடுத்திருக்காங்க.” என ராவ் கூறியதும்
“ஹே . . கிரேட் . . . கன்கிராட்ஸ் . . . தேங்க்ஸ் மேம் ” என பலக் குரல்கள்.
மற்றவர்கள் வாழ்த்து மழையில் முழ்கி பத்மினி திணறினாள். அவளும் தேங்க்ஸ் . . . நன்றி . . . வெல்கம் எனக் கூறிக் கூறி அலுத்துப் போனாள்.
அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றாகிவிட்டது. அவள்வரையில் அவள் தன் கடமையை ஆற்றியிருக்கிறாள். இதற்கெல்லாம் பாராட்டு அவசியமே இல்லை. டைரக்டர் ராவ் மேல் கோபம்கூட வந்தது. “ஏன் இப்படியெல்லாம் செய்தார் இந்த மனுஷன்?” என மனதில் கோபித்தாள். ஒரு வழியாய் தப்பித்து சற்று தனியே நின்றாள்.
அப்போது “தேங்க்ஸ்” எனக் குரல் கேட்க திரும்பினாள்.
ராகவன் நின்றிருந்தான். அவளுக்கு தன்னை நினைவிருக்குமா என சந்தேகம் அவனுள் உழல.
அவள் புருவத்தை உயர்த்தி புன்னகை பூத்ததும். அவனுள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. (கதாநாயகிக்கு தான் பட்டாம்பூச்சி வரணும்னு இல்லங்க . . . கதாநாயகனுக்கும் வரலாம்)
“நீங்க இங்க?”
“நீங்க ஏன் சாப்பிடல” என தடாலடியாக அவன் கேட்கவும். அவன் தன்னை வெகு நேரமாக