“செப்பறேன் . . . செப்பறேன்” என புன்னகையுடன் டைரக்டர் விலகினார். அடுத்து மற்றவரை கவனிக்க சென்றுவிட்டார். அங்கு வந்திருப்பவர்கள் பெரும்பாலும் சினிமா துறையை சார்ந்தவர்கள்.
பாட்டில் கிரீன் பிளைன் சாட்டின் புடவை. அதே நிறத்தில் முழங்கை வரை பிளவுஸ். அழகான விரிந்த கூந்தல் அவ்வப்பொழுது அதை கோதும் நகப்பூச்சு இல்லாத நீண்ட விரல்கள். லிப்ஸ்டிக் இல்லா புன்னகைக்கும் உதடுகள்.
“அது பத்மினியா?” கண்ட ராகவனுக்கு எங்கிருந்தோ சில்லென்ற சாரலடிக்க
“டேய் எதோ டைரக்டர் ஆகப் போறேனு சொன்னியே?” என அவன் மனசாட்சி வினவ
“ஆமா . . . யாரு இல்லனா?” மனசாட்சியுடன் மோத ஆரம்பித்தான்.
“ சாப்பிடலாமா? பசிக்குது” கயல் இவனுக்கும் மனசாட்சிக்கும் நடுவே புக
அவன் இன்னுமாய் பத்மினி மேல் வைத்த கண்களை விலக்க இயலாமல் தவித்தான்.
“ராகவ் சாப்பிட்டு கூட சைட் அடிக்கலாம்” கயல் கண் சிமிட்டி குறும்பாய் சொன்னாள்.
ராகவன் கயல் பக்கம் திரும்ப “ச்சே அவ்வளோ மோசமாவா பத்மினியை பார்த்தேன்” என தன்னை நொந்துக் கொண்டான்.
பப்பே முறை என்பதால் அவரவர் தங்களுக்கு வேண்டியதை எடுத்து சாப்பிடத் தொடங்கினர்.
கயல் அதற்குள் தனக்கு தேவையானதை சாப்பிட எடுத்துக் கொண்டாள். ராகவனும் எடுத்துக் கொண்டான். ஆனால் பத்மினி எதுவும் சாப்பிடவில்லை என்பதை ராகவன் கவனிக்க தவறவில்லை.
“அந்த பொண்ணை வேண்டானு சொல்லியாச்சு . . . இனி உனக்கு என்ன கவலை?” மனசாட்சி கேள்வி கேட்டது.
“எனக்கென்ன ” என சாப்பிடத் தொடங்கினான். “பப்பிக்கு பசிக்காதா?” மீண்டுமாய் யோசித்தான்.
“அந்த பச்சை கிளியை உனக்குத் தெரியுமா?” என பத்மினியை கண்டு மெல்ல ராகவனிடம் கயல் கேட்டாள்.
தெரியுமென தலையாட்டினான்.
”போய் பேசு”
”வேண்டாம்” என்றான்
“ஏன்?”
“பசிக்குதுனு சொன்னல . . . லொட லொடனு பேசாம சாப்பிடு” மிரட்டலாய அவன் கூற