பொண்ணையும் சேர்த்துக்குவேன்!னு ஏழு மாசமா வைராக்கியத்தோடு உன்னைத் தேடிட்டு இருக்கான்” என்றார் தங்கவேலு.
“என்ன சேகர்...அண்ணா சொல்றதெல்லாம் நிஜமா?” முரளி கேட்டான்.
“பின்னே?....உன்னை மிரட்டி ஊரை விட்டு அவங்க துரத்துவாங்க!...நான் அதைக் கண்டுக்காம...பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கணுமாக்கும்?...ம்ஹ்ஹும்...நம்ம கிட்ட அந்த வேலை நடக்காது!...எனக்கு என் பெற்றோரை விட...நான் தாலி கட்டின அந்தப் பெண்ணை விட நீதான் முக்கியம்” கான்கிரீட் உறுதியுடன் சொன்னான் தனசேகர்.
அவனருகில் வந்து அவனைக் கட்டிக் கொண்ட முரளி, “உண்மையிலேயே நீ எனக்கு நண்பனா கிடைச்சது போன ஜென்மத்துல நான் செஞ்ச புண்ணியம்டா” என்ற முரளி, “இருந்தாலும்...“கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்கிற மாதிரி கல்யாணமாகி ஏழெட்டு மாசமா நீ தனிக்கட்டையாக வாழுறதும்...அதுக்குக் காரணமா நான் இருக்கறதும்...எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு சேகர்” மனம் நொந்து சொன்னான்.
“அப்ப..நீ வந்து என் கூட...அந்த ஊர்ல...பழைய மாதிரியே இரு...நானும் அவளைக் கூட்டிக்கறேன்”
சில விநாடிகள் யோசித்த முரளி,
“சேகர்...தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ...நான் அங்க வந்து உன் கூட இருந்தால் உன்னோட வாழ்க்கையில் சந்தோஷங்கள் காணாமல் போயிடும்டா!...உன்னைப் பெத்தவங்களும்...உனக்குப் பொண்ணுக் குடுத்தவங்களும்...என்னை விரோதியாய்த்தான் பார்ப்பாங்க!...அதனால நான் தெனமும் உன் கூட போன்ல பேசறேன்...நம்ம நட்பை நாம தொடர்வோம்” என்றான்.
“ஏண்டா...நான் கூப்பிட்டா வர மாட்டியா?” சோகமாய்க் கேட்டான் தனசேகர்.
முரளி பதிலேதும் பேசாதிருக்க, “உனக்கு ஒண்ணு தெரியுமா?...என் அப்பாவும் சரி...அம்மாவும் சரி....இப்ப ரொம்ப மாறிட்டாங்க!... “முரளியைத் தேடிக் கண்டுபிடிச்சு..உங்க ரெண்டு பேரையும் நாங்களே சேர்த்து வைக்கறோம்”னு சொல்லியிருக்காங்க!...அதே மாதிரி என் மாமனார் வீட்டில் இருக்கறவங்க எல்லோருமே நம்மோட நல்ல நட்பைப் புரிஞ்சுக்கிட்டு...உனக்காக