Page 5 of 5
“அடி வசந்தி...இன்னியோட உன் கதை முடிஞ்சுதுடி..” உள் மனம் அவளை பயமுறுத்தியது.
சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு அவளுக்கு அந்த யோசனை வந்தது. “ம்ம்...அங்க நிற்கிறவனுகளைப் பார்த்தால் எல்லோருமே கொஞ்சம் வயசானவனுகளாய்த்தான் தெரியறானுக...அதிலும் போதைல வேற இருக்கானுக!...நான் குறுக்கே புகுந்து மின்னல் வேகத்துல ஓடினா...நிச்சயம் அவனுகளால் என்னைப் பிடிக்கவே முடியாது!...நான் ஸ்கூல்ல படிக்கும் போது ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினவ!...”
தயாரானாள்.
ஒன்...டூ...த்ரீ....
தொடரும்