Page 5 of 5
“ஏம்பா...உங்களுக்கு அவனிப் பார்த்தா அடையாளம் தெரியுமா?” கேட்டான்.
“தெரியாது...அவன் இருட்டில் வந்தான்...இருட்டில் அடிச்சான்..இருட்டிலேயே போயிட்டான்” என்றான் அவன்.
இதற்குள் அந்த இன்னொருவனும் சுயநினைவிற்கு வந்து விட எல்லோரும் அங்கிருந்து கிளம்பினர்.
வாசலிலேயே காத்திருந்த ராக்கம்மா இவர்கள் வந்ததும் விஷயத்தைக் கேட்க, முரளி பதில் சொன்னான், “இல்லைம்மா...அவள் எங்கேயும் காணோம்!...இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா பொழுது விடிஞ்சிட்டும்...விடிஞ்சதும் மொதல் வேலியா போய் போலீஸ்ல புகார் கொடுத்திடுவோம்!”
ராக்கம்மா பெரிய குரலில் ஓங்கியழ,
அங்கிருந்த எல்லோரையும் அனுப்பி விட்டு, தாயை வீட்டிற்குள் கூட்டி வந்தான்.
தொடரும்