“பணம் வேணுனா கேளுப்பா . .” தனுஷ் சொல்ல
“இருக்குங்க வேண்டாம்” என மறுத்தான்.
கோவிந்தனுக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுத்து முறையாக அழைத்தான் விமல்.
வாங்கியவன் “அடுத்து உனக்குதான் கல்யாணம்” என்றான் முகம் நிறைந்த புன்னகையுடன்.
விமல் ஏதும் பேசவில்லை.
“என்னப்பா சரிதானே” கோவிந்தன் மீண்டுமாய் வினவ
“என் கடமை முடிஞ்சதும்தான் கல்யாணம்” என்றான் விமல் வரண்ட குரலில்
“அப்படி என்ன பொல்லாத கடமை?” கோவிந்தன் விடவில்லை . . . அதை தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் மண்டை வெடித்துவிடும்.
“காணாம போன என் தம்பிய கண்டுபிடிச்சி என் அம்மா கையில ஒப்படைக்கணும் . . அவங்க கண் குளிர என் தமபிய பாக்கணும் . . அதுவரைக்கும் எனக்கு கல்யாணமும் இல்ல கருமாதியும் இல்ல” என லட்சியவாதியைப் போல பேசினான்.
அதுவரையில் அவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்து போனது.
தனுஷ் கோவிந்தனை முறைக்க . . கோவிந்தன் தன் தலையை சொரிந்தபடி முழித்தான்.
தனுஷ் மனதில் விவரிக்க முடியாத எண்ண அலைகள் வீசியது.
“எந்த ஊரு?” தனுஷ் குரல் அடைக்க கேட்டான்.