தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 33 - முகில் தினகரன்
ஞாயிற்றுக் கிழமை காலை.
பச்சைநாயகி அம்மன் கோயிலில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
அடுத்தடுத்து போடப்பட்டிருந்த இரண்டு மணவறைகளில், இஅரண்டு ஜோடிகளும் சந்தோஷமாய் அமர்ந்திருந்தனர்.
இன்னும் சில நிமிடங்களில் நிகழப் போகும் முகூர்த்தத்தின் போது தூவுவதற்காக மக்கள் கையில் அட்சதையோடு காத்திருக்க,
மேளக்காரர்கள் உற்சாகமாய்த் தட்டிக் கொண்டிருக்க,
தனசேகர் போட்டோகிராபரை விரட்டி விரட்டி படம் பிடிக்கச் செய்ய,
முன்னதாகவே வந்திருந்த சிங்கமுத்துவும், ஜெகாதாம்பாளும் முன் வரிசையில் அமர்ந்து தங்கள் மகன் கோகுலாய் எண்ணி முரளியை மாப்பிள்ளைக் கோலத்தில் பார்த்து ரசிக்க,
“சர்”ரென்று மண்டபத்தின் முன் வந்து நின்றது போலீஸ் ஜீப். அதிலிருந்து வேக வேகமாய் இறங்கி மண்டபத்திற்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர்.
அந்த ஜீப்பிற்குப் பின்னால், அதே வேகத்தில் வந்து நின்றது இன்னொரு கார். அதிலிருந்து நித்யாவின் உறவினர்கள் கும்பலாய் இறங்கினர்.
“யார் இங்கே தங்கவேலு?” மணவறைக்கு எதிரே வந்து நின்று கத்தலாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
எங்கிருந்தோ வேக வேகமாய் வந்து நின்றார் தங்கவேலு.
“ஒரு பொண்ணைக் கடத்திட்டு வந்த குற்றத்திற்காக...உங்களை அரெஸ்ட் பண்றேன்”