Page 3 of 3
வேறு எதுவும் பேச வழியில்லாமல் அமைதி காத்தார் நித்யாவின் தந்தை.
“என்ன இன்ஸ்பெக்டர்....கெட்டிமேளம் கொட்டிடலாமா?” சிரித்தபடியே சிங்கமுத்து கேட்க,
“ப்ரொஸீட்” என்று சொல்லி விட்டு, தானும் கொஞ்சம் அட்சதையை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டார்.
சில நிமிடங்களில்,
“கெட்டி மேளம்..கெட்டி மேளம்” என்று யாரோ கூவ,
இடியோசையாய் மத்தளச் சத்தம் அதிர,
இரு மணமகள்கள் கழுத்திலும் மங்கல நாண் ஏறியது.
“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்...பேரு வெளங்க இங்கே வாழணும்!..” பாட்டுக்காரன் பொருத்தமான பாட்டைப் போட்டு அமர்க்களப்படுத்தினான்.
முற்றும்