பரமன் அனுப்பிய மெசேஜ் கண்டு பயந்த ஸ்ரீவர்தினி தன் தங்கை கௌசல்யா வந்து அதை பார்ப்பதற்குள் அவரசமாக டெலிட் செய்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
காரில் சென்றுக் கொண்டிருந்த பரமனோ தான் அனுப்பிய மெசேஜ்க்கு பதில் வராமல் போகவே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நேராக பங்களாவிற்குச் சென்றான்.
அங்கு இன்னும் ஸ்ரீரங்கன் வராமல் போகவே குருவிடம்
”அண்ணா இன்னும் வரலையே” என கேட்க
”ஃபோன் பண்ணிப்பாருண்ணா” என சொல்ல உடனே பரமனும் ஸ்ரீரங்கனுக்கு போன் செய்தான்
”ஹலோ அண்ணா இன்னுமா ஆபிஸ்ல இருக்க”
“வந்துட்டேன்” என சொல்லி ஃபோனை கட் செய்த அடுத்த 2 நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்தான் ஸ்ரீரங்கன்.
சோபாவில் சோகமாக அதைவிட பரம அமைதியாக அமர்ந்திருந்த பரமனிடம் வந்த ஸ்ரீரங்கன்
”என்னாச்சி பரமா அமைதியா இருக்க”
”இன்னிக்கு ரொம்ப அலைச்சல்ணா” என புலம்ப அதற்கு ஸ்ரீரங்கனோ
”சாப்பிட்டியா”
“இல்லை நீ சாப்பிட்டியாண்ணா”
“இன்னும் இல்லை, சரி வா 3 பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு குருவிடம்
”கிச்சன்ல சமையல்காரன் இருப்பான், சீக்கிரமா டிபன் செய்ய சொல்லு சாப்பிடனும்” என
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.