தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 02 - சசிரேகா
மறுபக்கம் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு போர்ஷன் வீட்டிற்குள் ஒரே கூச்சல், அக்கம் பக்கத்தில் வாழும் குடித்தனக்காரர்கள் சலசலவென பேசிவிட்டு கோபமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் திட்டிய திட்டுக்களையும் கோபத்தையும் தாங்கிக் கொண்ட ராமலிங்கமோ தன் பக்கத்தில் இருந்த தன் மகள் அபிநயாவை பார்த்து முறைக்க அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு
”சாரிப்பா” என்றாள் ஈனமாக அதைக்கேட்டு அவருக்கு கோபம்
”ஏன்தான் நீ இப்படியிருக்கியோ, அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சி, இன்னிக்கு என் மானமே போயிடுச்சி,
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வேலைக்கு போகாம இதெல்லாம் ஒரு வேலையா”
”இன்ஜினியரிங் படிச்சா யார் வேலை தருவாங்கப்பா, இப்பலாம் இந்த படிப்புக்கு மதிப்பில்லாம போச்சிப்பா, அதான் நான் யூ-ட்யூபரா இறங்கிட்டேன்”