(Reading time: 8 - 15 minutes)
Inspector Then
Inspector Then

என்றார் ரமணி எரிச்சலுடன்.

  

"மிஸ்டர் ரமணி, திருடனுங்க நீங்க சொல்வது போல் பீரோ, லாக்கர்ல இருந்த பொருட்களை கலைச்சு போட்டிருந்தா பரவாயில்லை. ஹால்ல இருந்த டேபிள்ல இருந்த பொருட்களை அப்படி தூக்கி போட வேண்டிய அவசியம் என்ன?"

  

"அங்கேயும் ஏதாவது கிடைக்குதான்னு தேடி இருந்திருக்கலாம்."

  

"இட் மேக்ஸ் சென்ஸ் இப் தே டிட் நாட் ஃபைண்ட் எனி திங். திருட வந்தவங்க முதல்ல பீரோ, லாக்கர்ல என்ன இருக்குன்னு தான் பார்ப்பாங்க... அங்கேயே இவனுகளுக்கு வேண்டிய அளவுக்கு பொருள் கிடைச்சிருச்சு! அப்புறம் தேவையே இல்லாமல் ஏன் பேப்பர், வேஸ் எல்லாம் தூக்கிப் போடனும்?"

  

ரமணியும், முத்துக்குமாரும் அமைதியாக இருந்தார்கள்.

  

"உங்க மனைவி கையை கட்டும் போது அவங்க போராடினதற்கான அறிகுறி எதுவுமே இல்லை... இன்ஃபாக்ட் இந்த சோ கால்ட் திருடனோ, திருடனுங்களோ, எப்படி வீட்டுக்குள்ள வந்தாங்க? எப்படி பக்காவா கதவை பூட்டிட்டுப் போனாங்க? நீங்க சொன்னதை வச்சு பார்க்கும் போது உங்க மனைவி அவங்களுக்கு தெரியாதவங்க யாருக்கும் கதவை திறக்க மாட்டாங்க... சோ..."

  

"அப்போ, வந்தது அவளுக்கு தெரிஞ்சவங்க யாரோவாக இருக்கணும்!?"

  

"யெஸ்! அப்படி வந்த யாரோ தான் கொலை செய்துட்டு தப்பிச்சு போயிருக்கனும். இவங்க மோட்டிவ் உங்க மனைவியை கொலை செய்றது தான், பணமோ, நகையோ கிடையாது."

  

"அப்படி பார்த்தால் திருடு போன பொருட்களுக்கு அர்த்தமே இல்லையே, இன்ஸ்பெக்டர்?"

  

"அது வெறும் செட்டப்! திருடுவதற்காக நடந்த கொலை போல காட்ட செய்யப்பட்ட செட்டப். அதை தான் தேவையே இல்லாம கீழே கிடந்த பிளவர் வேஸும் காட்டுது."

  

4 comments

  • Awesome!! Expected but still confirm ah solla mudiyalai :Q: Interesting update ma'am 👏👏👏👏👏👏👏👏 I remember couple of articles in the past... Husband-a ellam seithuttu onnum theriyadha appavi pole scene potukittu 3:) Inga ena agumnu parka waiting ji :yes: <br />Thank You
  • superb. tavalai than vayal kedum. muthukumare ularitar pola iruku. Inspector ithukaga dan Ramani mela pin point seithar polaruku.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.