“ஓ, மை காட்!"
"உங்க மனைவியை பத்தி சொல்லுங்க! அவங்களுக்கு வேற மாதிரியான உறவுகள்...???"
"ஷட் அப் இன்ஸ்பெக்டர்!"
"உங்க மனநிலை எனக்கு புரியுது, ஆனால் நாங்க எல்லா ஆங்கிளிலும் பார்க்கணும் பாருங்க."
"இந்திரா ரொம்ப நல்ல பொண்ணு இன்ஸ்பெக்டர்... அவள் குணம் எப்படி இருந்தாலும் கேரக்டரில் எந்த தப்பும் சொல்ல முடியாது!" என்றார் ரமணி.
"இங்கே குணம்னு நீங்க சொல்றது உங்க மனைவிக்கும் அவங்களுக்கும் இடையே இருந்த பிரச்சனைகளை பற்றியதுன்னு நினைக்கிறேன்?"
"ஹ்ம்ம்... எந்த மருமகளுக்கு தான் மாமியாரை பிடிக்குது?"
"ம்ம்ம்... உங்க இறந்துப் போன மகளை பத்தி சொல்லுங்க மிஸ்டர் ரமணி!"
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு, சார்?"
"இருக்குன்னு நான் நினைக்கிறேன்."
"இதுக்கு மேல உங்க கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை. முத்து எழுந்திரு போகலாம்..."
"போங்க, நான் தடுக்க மாட்டேன்! ஆனால் என்ன நடந்திருக்கும்னு எனக்கு அனுமானம் இருக்கு... சொல்றேன்..."
நாற்காலியில் இருந்து எழுந்து நின்றிருந்த ரமணியும், முத்துக்குமாரும் நகராமல் நின்று தேன் சொல்வதைக் கேட்டார்கள்.