தொடர்கதை - வானவில்லாய் - 27 - ச.சிந்தியா
“கயல்? வெள்ளி, சனி, ஞாயிறுல முரளி வந்திருந்தார், நீ வீட்டுக்கு வரலை. என்னால புரிஞ்சுக்க முடியுது. இன்னைக்கு எதுக்கு உள்ளே வராம உடனே கிளம்பனும்னு சொல்ற?” எனக் கேட்ட வேதாவின் குரலில் மட்டும் அல்லாமல் முகத்திலும் கேள்வி நிறைந்து இருந்தது.
ரித்விக்கின் ஸ்கூல் பையை காரில் வைத்துக் கொண்டிருந்த கயல்விழி வேதாவின் முகத்தைப் பார்க்காமல், “வேலை இருக்கு, வேதா,” என்று மட்டும் சொன்னாள்.
“கயல், நான் ஏதாவது உன் கிட்ட தப்பா சொல்லிட்டேனா? போன வாரம் பாதி நாள் நல்லா தானே இருந்த? நீ பொதுவா எல்லோரையும் விட்டு தள்ளி இருக்கது தெரியும். அதனால தான் என் கணவர் வர நாள்ல சரியா பேசாம இருக்கேன்னு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு தோழியுடன் ஓடினான்.
“பசங்க உனக்காக முடிவை எடுத்துட்டாங்க. இன்னும் யோசிச்சுட்டு நிக்காதே கயல். போ, உள்ளே போ!” என வேதா சொன்னப் போதும் கயல்விழி அரை மனதுடன் தான் நடந்தாள்.