தொடர்கதை - பனிப் பாறை - 07 - பிந்து வினோத்
அன்று இரவு, சரவணன் வேலையை முடித்து தூங்க வந்தப் போது, சுமியை அணைத்தபடி போர்வை மூடாமல் படுத்திருந்த மனைவியைப் பார்த்தான்.
ஏ.சி குளிரினாலோ என்னவோ கல்பனா ஒரு பக்கமாக சுருண்டுப் படுத்திருந்தாள்!
அவனுக்கு கஷ்டம் என்ற உடனே உதவ அவனின் மனைவி எவ்வளவு யோசித்திருக்கிறாள்?
குடும்பம் என்பதை விட்டு எதையும் சிந்திக்காது, ஒரு கஷ்டம் என்ற உடன் தோள் கொடுக்க முன்வரும் எத்தனை நல்ல துணைவி இவள்? இவளை ஒரு கணம் கூட மறக்க எப்படி அவனால் முடிந்தது...?
கல்பனா போன்ற அழகான, இனிமையான மனைவி இருக்கும் போது ... னாவின் நெற்றியில் அசைந்துக் கொண்டிருந்த முடியை மெல்ல கோதி விலக்கி விட்டான்.
தூக்கத்தில் இருந்தாலும் சுடராய் ஒளி விட்ட அவளின் அழகை அமைதியாக சில வினாடிகள் ரசித்தான்.
This story is now available on Chillzee KiMo.
...