காலையிலேயோ, ராத்திரியிலேயோ வித்தியாசமா எதையாவது பார்த்தீங்களா? இல்லை கேட்டீங்களா?”
“வித்தியாசமா எதுவும் நடக்கலையே சார்.”
“நல்லா யோசிச்சு பாருங்க, ஏதாவது உங்க கண்ணுல பட்டிருக்கும் இல்லை காதுல விழுந்திருக்கும்... சின்னதா கூட இருக்கலாம்...?”
“அது மாதிரி...” என்று மறுப்பாய் சொல்ல துவங்கிய மாணிக்கம் எதுவோ நினைவு வந்தவராக,
“இது உப்பு சப்பிலாத விஷயம் சார்...” என்றார்.
“எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க.”
“அந்த பொண்ணோட பாடியை கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி நாள் நைட், இல்லை விடிகாலையா இருக்கலாம், நாய்ங்க எல்லாம் பயங்கரமா கத்திச்சு. நான் எழுந்துப் பார்த்தேன், இந்த பக்கம் யாருமில்லை, ஆனால் இருட்டுல ஒரு கார் போனது போல இருந்துச்சு...”
“காரா?”
“ஆமாம் சார் ஹெட்லைட் வெளிச்சம் இல்லாமல் போச்சு... ப்ரேக் லைட் மட்டும் கொஞ்சமா தெரிஞ்சது.”
“அது உங்களுக்கு தெரிஞ்ச கார் போல இருந்துச்சா?”
“சார் இருட்டுல கார் தெரிஞ்சதே பெரிய விஷயம் என்ன கலர்னு கூட தெரியலை. அது வேற எங்கேயாவது போன காரா கூட இருக்கலாம், நான் அது ரோட்டுல போனதை தான் பார்த்தேன்... பங்களாவோட பின்பக்கம் போற வழியில திரும்பின மாதிரி எனக்கு தோணுச்சு, அவ்வளவு தான்...”
“ஓகே...”