(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

ஆதித்யா அவர்கள் அனைவர் முன்னிலையில் சாதாரணமாக பேச முடியாது கூச்சமும், சங்கோஜமுமாக நெளிந்துக் கொண்டிருந்தான்.

  

நல்ல வேளையாக அப்போது சான்வி அவனை வாட்ஸ்-அப்பில் அழைத்தாள்.

  

அங்கே இருந்து தப்பித்தால் போதுமென்ற எண்ணத்துடன், “அக்கா கூப்பிடுறா, நானா பேசிட்டு வரேன்,” என சொல்லி எழுந்தான் ஆதி.

  

“யாரு சான்வியா? என் கிட்ட ஒரு நிமிஷம் கொடு. அங்கிளை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,” என சொல்லி போனைக் கேட்டாள் ஹரிணி.

  

மறுத்து சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் போனை கொடுத்தான் ஆதி.

  

“சான்வி! என்ன காலையில எழுந்ததுமே தம்பிக்கு போன் போட்டுட்ட போல இருக்கு?” ஹரிணி பல வருடங்கள் சான்வியுடன் பழகியவள் போல விசாரித்தாள்.

  

“நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கேன் ஆன்ட்டி. ஸ்கூல் கேம்பஸ் உள்ளே போனப் பிறகு சரியா பேச முடியாது.”

  

“புரியுது, புரியுது! நல்லா சாரீ கட்டுறீயே! இந்த புடவை உனக்கு நல்லா இருக்கு!”

  

சிரிப்புடன் சான்வி, “தேங்க்ஸ் ஆன்ட்டி!” என சொல்லவும், அக்ஷராவும் அப்படி என்ன சேலை கட்டி இருக்கிறாள் என்று ஹரிணி பக்கம் முகத்தை நீட்டிப் பார்த்தாள்.

  

விவேக்கிற்கும் பார்க்க ஆசையாக இருந்தது.

  

அம்மா பக்கத்தில் இருந்த உப்பை கவனித்தவன், உப்பை எடுக்கும் சாக்கில் எழுந்து வந்து போனை ரகசியமாக பார்த்தான்.

  

உண்மையாகவே சான்வி அழகாக தெரிந்தாள். இளம் பச்சையில் தொடங்கி க்ரீமில் முடிந்த

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.