(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அவனுக்கு கூச்சமாக இருந்தது. அதனால் பசியை பொருட்படுத்தாமல் மீண்டும் அவன் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.

  

மறுநாள் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப்பிக்கை சம்பிட் செய்ய வேண்டும். அதைப் பற்றிய விபரங்களையும் தர வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு டீமின் தனிப்பட்ட திறமையை காட்ட கிவிஸ் நிகழ்ச்சி இருந்தது.

  

அனைத்து டீமையும் பல க்ரூப்களாக பிரித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு க்ரூப்பிலும் முதல் மூன்று இடங்களில் வருபவர்கள் மட்டும் அடுத்த ரவுண்டிற்கு போக முடியும். அதாவது கிட்டத்தட்ட இருபது டீம்கள் மட்டுமே செலக்ட் ஆகும். பல நூறு டீம்களில் இருந்து இருபது டீம் மட்டுமே அடுத்த ரவுண்டிற்கு செல்ல முடியும்!

  

ஆதி போட்டிக்கு ஏற்ப தன் மனதை தயார் செய்துக் கொண்டான்.

  

இது அவனுக்கான வாய்ப்பு! அவனின் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு!

  

“ஆதி, நினைச்சேன், நீ இங்கே தான் இருப்பேன்னு. என் பெரியப்பா பார்த்து பயந்துட்டீயா? அவர் பார்க்க, பேச அப்படி தான் பயமுறுத்துவார். நான் கூட சின்ன வயசுல அவரை பார்த்தாலே அழுவேன். உனக்காக டின்னரை இங்கேயே எடுத்து வந்தேன்,” என அக்ஷரா கையிலிருந்த பாத்திரங்களை மேஜை மீது கடை பரப்பவும், ஆதிக்கு அதிசயமாக இருந்தது.

  

“எனக்காக இதெல்லாம் செய்யனும்னு கிடையாது அக்ஷரா. நானே கொஞ்ச நேரத்துல வந்திருப்பேன்.” சந்கோஜத்துடனே சொன்னான் ஆதி.

  

“எனக்கு கிடைச்ச ஒரு குட் பிரென்ட் நீ. உனக்காக நான் இதை கூட செய்ய மாட்டேனா? நீ ஷை டைப்புன்னு எனக்கு தெரியுது. நான் உன்னை எல்லோர் கிட்டே இருந்தும் காப்பாத்துறேன், பயப்படாதே!”

  

அக்ஷரா சொன்னதைக் கேட்டு ஆதிக்கு சிரிப்பு கூட வந்தது.

  

“நாளைக்கு பர்ஸ்ட் ரவுண்ட்ல நாம நல்லா செய்றது முக்கியம் அக்ஷரா. லேட்டஸ்ட் பிஸ்னஸ்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.