அவரிடம் போனைக் கொடுத்தாள்.
ஹரிணி வழியாக சான்வியின் புகழை அதிகமாக கேட்டிருந்த நித்தினும் ஆர்வத்துடன் சான்வியிடம் பேசினார்.
எல்லோரும் பேசி முடித்ததும், கடைசியாக போன் மீண்டும் ஆதியின் கைக்கு வந்தது.
“அக்கா கிட்ட பேசிட்டு வரேன்!” தயக்கம் நிறைந்த குரலில் சொல்லி விட்டு சென்றான் ஆதித்யா.
“நீ லக்கி ஆதி. அக்ஷரா குடும்பம் இப்படி நல்லவங்களா இருக்காங்க!!” சான்வி மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“ஆமா அக்கா. அங்கே அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க. அவங்க கிட்ட நீ ஒருத் தடவை பேச வேண்டியது தானே? அங்கே போய் சேர்ந்ததும் பேசினதோட சரி?”
“முதல் ரவுன்ட் முடிச்சுட்டு பேசலாம்னு இருக்கேன். நாளைக்கு பர்ஸ்ட் ரவுன்ட். இது க்விஸ். அடுத்த மெயின் கான்டெஸ்ட்க்கு கூட நானும் அக்ஷராவும் எங்க டாப்பிக் செலக்ட் செய்துட்டோம். இனி அதை வச்சு ஜெயிக்க வேண்டியது தான் பாக்கி.”
“பெஸ்ட் ஆப் லக், ஆதி. தைரியமா பதில் சொல்லு! ரிசல்ட் வந்ததும் எனக்கு மெசேஜ் அனுப்பு.”
“சரி சான்வி. நாளைக்கு வென்யூ போனதும் உன் கிட்ட பேசுறேன்.”
“சரிடா, நல்லா ப்ரிப்பேர் செய்துட்டு போ.”
சான்வியிடம் பேசியது ஆதித்யாவிற்கு தனி தெம்பை கொடுத்திருந்தது.
அக்ஷரா, மற்றும் அவளின் பெரியப்பா குடும்பத்தினருடன் மீண்டும் சென்று கலந்து உரையாட