கோபம்? அவ உன் கிட்ட, நான் வேலையை வேண்டாம்னு சொன்னேன்னு சொன்னதுக்காகவா??”
“மனோஜ், இதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது...?”
“இல்லை அமுதா... நீ மஞ்சுவோட க்ளோஸ் ஃபிரென்டா இருக்கலாம்... அதுக்காக நீ அவ மேல கோபப் படுறதும் எனக்கு சரியா படலை... பிடிக்கலைன்னு கூட சொல்லலாம்...”
அமுதா மெல்லிய திகைப்புடன் மனோஜைப் பார்த்தாள்...
சரவணன் முகத்திலோ பெரிய புன்னகை வந்திருந்தது!
“சாரி அமுதா... மஞ்சு உன் கிட்ட என்ன சொல்லி நீ ரெகமென்ட் செய்த வேலையை வேண்டாம்னு சொன்னான்னு எனக்கு முழு விபரம் தெரியாது... ஆனால், மஞ்சு அப்போ இருந்த கடினமான சூழ்நிலை எனக்குத் தெரியும்...”
“ஹ்க்கும்...!!!”
அமுதாவின் பதிலைக் கண்டுக்கொள்ளாமல் விளக்கத்தை தொடர்ந்தான் மனோஜ்.
“நான் அப்போ ரொம்ப மென்டல் ப்ரஷர்ல இருந்தேன் அமுதா... நம்ம ஜாப் பத்தி உனக்கு தெரியாதா என்ன?? ஆபீஸ்ல ரீ-ஆர்க் ஆகி மேனேஜர் மாறினப்புறம் நிறைய விஷயங்கள் நடந்திருச்சு... வேணும்னே என்னை மட்டம் தட்டுற மாதிரி நிறைய செய்தாங்க... ஓரளவுக்கு என்னால ஹாண்டில செய்ய முடிஞ்சது... அதுக்கு மேல முடியலை... அதை எல்லாம் நான் மஞ்சு கிட்ட தான் வென்ட் அவுட் செய்தேன்... பொதுவா அவக் கிட்ட நான் கோபமா பேசினதே கிடையாது... இந்த நேரத்துல அவக் கிட்ட கத்தினேன், திட்டினேன், சண்டைப் போட்டேன்... அடிக்கக் கூடப் போனேன்...”
“மனோஜ்!!” என்ற அமுதாவின் குரலில் காரம் இருந்தது...
“இதெல்லாம் சொல்ல எனக்கு மட்டும் சந்தோஷமா இருக்குன்னு நினைக்குறீயா அமுதா???