அரவிந்த் அடுத்து வந்த இரண்டரை வருடங்களும் இரவு பகல் பார்க்காமல் மாடுப் போல உழைத்தான்....
சாந்தி அவளுடைய பேப்பரில் சொல்லி இருந்த மருத்துவ வழி முறை, அவன் சொன்ன அவனுடைய முறை என இரண்டையும் எடுத்து ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சிகளை தொடர்வதால் வரும் நன்மைகளை ரெகார்ட் செய்து... இரண்டு வழி முறைகளுக்குமான நன்மைகளை விளக்கி... அவற்றை எப்படி செய்வது, எந்த கேன்சர் கட்டத்தில் செய்யலாம்... என அனைத்தையும் தொடர்ந்து ஒரே மூச்சில் செய்து முடித்தான்...
அதற்காக சாந்தியை அவன் மறந்து விடவில்லை... அவனிடம் இருந்த அவளின் நம்பர் வழியாக மட்டுமல்லாமல் ஃபேஸ்புக், ட்விட்டர் என சோஷியல் மீடியாவிலும் அவளை தேட முயன்றான்... எப்போதாவது சந்திக்கும் முதுகலை கல்லூரிக் கால தோழர்களிடமும் அவளைப் பற்றி விசாரித்தான்...
ஹுஹும் ஒரு தகவலும் இல்லை... இன்றைய இணைக்கப் பட்ட இன்டர்நெட் யுகத்திலும் அவளை அவனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை... காற்றில் கரைந்துப் போனவளாக காணாமல் போயிருந்தாள்...!!!!
இறுதியாக ரிசெர்ச்சின் ஃபைனல் ரிபோர்ட்டை பிரின்ட் அவுட் எடுத்து அதில் கையெழுத்து போட்டு மூடி வைத்தப் போது, ஹப்பாடியோ முடித்து விட்டோம் என்ற திருப்தி அவனுக்கு ஏற்பட்டது.
இந்த ரிசெர்ச் ரிப்போர்ட் கட்டாயம் மருத்துவத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவனுக்கு தோன்றியது...
சாந்தி மட்டும் அவனின் அருகில் இருந்தால்...
கூரான கத்தியை மார்பில் செருகியதுப் போல அவனின் உயிர் வரை வலித்தது...
அந்த தடிமனான ரிப்போர்ட் ஃபைலை கையில் எடுத்துக்கொண்டு டாக்டர் ஜேம்ஸ் அறையை
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.