“ஆமாம் இன்ஸ்பெக்டர்...! அன்னைக்கு ரோசி கிளம்பின பிறகு நாய்களை கட்டிப் போட்டுட்டு, திலீப்பும் தமிழும் வர காத்திருந்தேன். முதல்ல தமிழ் தான் வந்தான். அவன் கிட்ட பேசி என் பொண்ணு வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதேன்னு கெஞ்சிட்டு இருந்தப்போ, எதிர்பாராமல் ரோஹினி அங்கே வந்தா...! நாங்க பேசி இருந்ததை கேட்டிருந்ததால கோபத்தோட வந்தா... இள ரத்தம் ஆச்சே விவரம் புரியாமல் கோபத்துல கத்தினா... என் கிட்ட, இவன் கிட்ட இப்படி பேசிட்டு இருக்காமல் போலீஸ்ல பிடிச்சு கொடுங்கன்னு சொன்னாள்.. அப்போ... அப்போ...”
“என்ன நடந்தது மேடம்?” என்றான் வினோதன்.
“அந்த தமிழ் அவளை மிரட்டினான்... அவள் வாழ்க்கையையும் பாழாக்கிடுவேன்னு சொன்னான்... ஆனால் ரோஹினி கேட்கலை... அப்போ கோபத்துல தமிழ் அவள் தலையை பிடிச்சு அங்கே இருந்த மீன் தொட்டியில விட்டுக் கத்தினான்... நான் அவனை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்... ஒன்னும் செய்ய முடியலை... அவன் அவ கழுத்துல இருந்து கையை எடுத்தப்போ ரோஹினி கிட்ட எந்த அசைவும் இல்லை. இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. என்ன செய்றதுன்னு புரியாமல் திலீப்க்கு போன் செய்தேன். திலீப் வீட்டு பக்கத்திலேயே தான் இருந்தான்.”
“ஆமாம் இன்ஸ்பெக்டர்... அந்த தமிழ் மேல எங்களுக்கு கோபம், ஏன் கொலவெறின்னு கூட சொல்லல்லாம்... ஆனால் அமிர்தா பேரு வெளியே அசிங்கப் படுறதை நினைச்சு பார்க்க முடியலை... அதான் வேற வழி இல்லாமல் தமிழையே ரோஹினியை தூக்கிட்டு போய் அந்த கிணத்துல போட சொன்னோம்... தற்கொலைன்னு கேஸ் முடிச்சிட்டா விஷயம் அப்படியே போயிடும்னு நினைச்சோம்...”
“அதனால தான் ஆரம்பத்துல இருந்தே எல்லோருக்கும் ப்ரெஷர் கொடுத்துட்டே இருந்தீங்க?”
“ஆமாம், எங்களுக்கு வேற வழி தெரியலை... எங்க வீட்டு பொண்ணை எப்படி நாங்க அசிங்க படுத்த முடியும்?”
“ரோஹினிக்கு நடந்தது உங்க வீட்டு பொண்ணுக்கு நடந்திருந்தாலும் இதையே சொல்வீங்களா? உங்க ஆளுங்க செய்த ஆக்சிடன்ட்டால் அவ அம்மா பைத்தியமா அலையுறாங்களே அதுக்கு