வெளியே வராமல், ப்ரெஸ்க்கும் தெரியாமல் பார்த்துக்கனுமாம்... அமிர்தா பேர் வெளியே வராமல் இருக்கனும் என்பது திலீப்போட எக்ஸ்ட்ரா ரெக்வெஸ்ட்...”
“ஓ!”
“அவங்க வீட்டுப் பொண்ணை பாதுக்காக்க நினைக்கிறார் தப்பில்லை... ஆனால் அந்த தமிழ் மிரட்டின முதல் முறையே போலீஸ்க்கு தகவல் சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை, அந்த ரோஹினியோட சாவுன்னு எல்லாத்தையும் தடுத்திருக்கலாம்... ப்ச்...”
“யெஸ் சார்... ரோஹினி தவறான நேரத்துல தவறான இடத்துல இருந்ததால இறந்துட்டா... பாவம்...”
“யெஸ்...”
“மக்களுக்கு நம்ம போலீஸ் போர்ஸ் மேல நம்பிக்க வர மாதிரி நாம நம்ம டிபார்ட்மென்ட் செய்ற நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லனும் சார்... அப்போ தான் இது போன்ற டைமுல நம்மக்கிட்ட நம்பி வருவாங்க...”
“ட்ரூ வினோதன்...”
“சார், இந்த கேஸ் இவ்வளவு சீக்கிரம் க்ராக் செய்ய முக்கிய காரணம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தான். அவரை ட்ராபிக்ல இருந்து க்ரைம் பிரான்ச் மாத்த முடியுமா?”
“ஷுயர் நான் ரெகமென்ட் செய்றேன்... ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய உங்க கூட என்னை அக்கம்பனி செய்ய சொன்ன போது கூட இப்படி ஒரு அரெஸ்ட்டை நான் எதிர்பார்க்கலை... ஏன் அந்த அமிர்தா பத்தி முதல்ல இரண்டுப் பேரும் அப்படி பேசுனீங்க?”
“திலீப்பை அன்-கம்பார்ட்டபில் ஆக்க சார்... டம்மி டெஸ்ட் ரிசல்ட்ஸ் வைத்து நம்ம போரன்சிக் எக்ஸ்பர்ட்ஸ் கையில தூக்கி வீசி இருந்தா தான் பாடி நெத்தியில அடி பட்டிருக்கும்னு சொன்னார்... அந்த நெத்தி காயமும், முதுகில இருந்த காயமும், ரோஹினி இறந்தப்புறம் பட்டது... சோ அதுவும், அந்த பொண்ணோட வயித்துல இருந்த கெமிக்கலும் அவ கொலை