என்ன சொல்வீங்க?”
“இது எதுவுமே எங்களுக்கு தோணலை இன்ஸ்பெக்டர்! நாங்க எதையும் வேணும்னோ ப்ளான் செய்து செய்யலை...! அமிர்தாவை காப்பாத்தனும்னு நினைச்சோம்... வேற எதையும் யோசிக்கலை.”
“உங்க இரண்டுப் பேரையும் கொலையை மறைச்ச குற்றத்திற்காக கைது செய்றோம்... அந்த தமிழை ஏற்கனவே எங்க டீம் அரெஸ்ட் செய்தாச்சு...”
“இன்ஸ்பெக்டர் நான் ஒரே ஒரு போன் கால் செய்யவா?”
திலீப்பை யோசனையாக பார்த்து விட்டு சரி என்று ஏற்றுக் கொண்டான் தேன்.
போனை டையல் செய்து யாரிடமோ பேசிய திலீப், டி.எஸ்.பியிடம் அதை நீட்டினான்.
வாங்கி பேசியவர்,
“ஓகே சார்... ஓகே சார்...” என்று விட்டு போனை அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.
************
திலீப்பையும், சுலோச்சனாவையும் ஏற்றிக் கொண்ட போலீஸ் ஜீப் நகர்ந்து செல்ல, டிஎஸ்பி தன்னருகே நின்ற தேன்-ஐயும், வினோதனையும் பாராட்டினார்.
“வெரி குட் வொர்க் ஜென்டில்மேன். நீங்க நம்ம ஃபோர்சொட பெஸ்ட் ஆபிசர்ஸ்ன்னு திரும்ப ப்ரூவ் செய்துட்டீங்க... குட் ஜாப்.”
“தாங்க்ஸ் சார். ஒரு சின்னக் கேள்வி, திலீப் உங்க கிட்ட போன் கொடுத்தானே, அந்த போன் யார் கிட்ட இருந்து சார்...??”
“ஹும்... வேறென்ன எல்லாம் பெரிய இடத்துல இருந்து தான். இப்போதைக்கு விஷயம்