மனதுக்குள் கோபத்தை வளர்த்துக் கொண்டே செல்வது எப்போதுமே மஞ்சுவிற்கு உசிதமானது அல்ல... ஜோதி ஆகட்டும், நிர்மலா ஆகட்டும், இப்போது மனோஜ் ஆகட்டும்... எப்போதுமே தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்பவர்களை, அரவணைத்து செல்ல அவள் தயங்கியது இல்லை...
இப்படி செய்வதால் அந்த கோபம், அதனால் ஏற்படும் சோகம், குரோதம் போன்ற உணர்வுகள் அவளை தொல்லை செய்ய அவள் அனுமதிப்பதும் இல்லை...
மஞ்சுவைப் பொறுத்த வரை, அதெல்லாம் குப்பைத்தொட்டியில் போட வேண்டியவை... பொக்கிஷங்களை சேகரித்து வைக்கும் மன பெட்டகத்தில் வைக்கக் கூடியவை அல்ல...
சாவியால் கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டது...
மஞ்சுவின் உதட்டில் இருந்த புன்னகை பெரிதானது... அவளின் விழிகள் எதிர்பார்ப்புடன் பார்த்தது...
அவள் நினைத்ததுப் போலவே மனோஜ், “PBS!” என்ற அழைப்புடன் வந்தான்...
அவளை பார்த்ததும் அவன் முகத்தில் வந்த மலர்ச்சியும், கண்களின் வந்த மின்னலும் மஞ்சுவிடமும் பிரதிபலித்தது...
“என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க???”
மஞ்சு பதில் சொல்லாது மனோஜ் பக்கம் நேராக திரும்பிப் பார்த்தாள்...
“உங்களுக்கு எப்படி போச்சு இன்னைக்கு டே???”
“நத்திங் ஸ்பெஷல் pbs... நார்மல் டே... நிறைய டிஸ்கஷன்ஸ் போச்சு... இப்போ நாம தொடங்குறது சரியா நடந்தா கம்பெனியோட எதிர்காலமும், நம்ம எதிர்காலமும் நல்லா