“ரச்சு, நீ சின்ன குழந்தை இல்லை!”
தீபா அதை சொன்னாளோ, இல்லையோ, அவ்வளவு தான்!!! ரச்னாவின் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின.
“ரச்சு!”
“அந்த குழந்தை மேல அவ்வளவு பாசம் வச்சிருந்தேன் தீபா. எனக்குன்னு வந்த உறவுன்னு...” மேலே பேச முடியாமல் விசும்பினாள் ரச்னா.
“ரச்சு, முதல்ல இந்த செண்டிமெண்ட் பேச்சை நிறுத்து. உன் கருவில உருவாகி இருந்தது குழந்தையே இல்லை. உயிரோ உருவமோ இல்லாத ஒன்னு மேல அன்பு வச்சேன்னு நீ சொல்றது சரியே இல்லை.”
“உனக்கு புரியாது தீபா. எனக்குன்னு யாரு இருக்கா?”
“இங்கே பாரு ரச்சு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. தேவைக்கு அதிகமா யோசிக்காதே. ஷ்ரேயான்ஷ் பிஸியாக இருக்கிறார்னு உனக்கே தெரியும்.”
ரச்னாவின் இதழ்களில் கசப்பான புன்னகை ஒன்று தோன்றியது.
“இப்போ பார் நான் அவரை உன் கிட்ட பேச சொல்றேன். எல்லாம் சரியாகிடும்...”
“வேண்டாம் தீபா...”
ரச்னாவின் மறுப்பை சட்டை செய்யாமல் தன் மொபைலில் ரச்னாவின் கணவன் ஷ்ரேயான்ஷின் மொபைல் நம்பரை தேடி கண்டுபிடித்து அழைத்தாள் தீபா.
டாக்டர் என்ற விதத்தில் ஷ்ரேயான்ஷ் ரச்னாவுடன் பேசுவது எவ்வளவு முக்கியமானது என்று
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.