சௌந்தரபாண்டியபுரம், திருநெல்வேலி.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வாழும் அந்த கிராமத்தின் சுவர்களில் எங்கெங்கு நோக்கினும் சுவரொட்டிகள்! விஜய், விக்ரம், சூர்யா என திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்புக்கு இடையே, திருமண வாழ்த்து என கொட்டை எழுத்துக்கள் மின்னின.
“இவனுங்க கல்யாணம் செய்ததும் போதும் நம்ம சுவரை எல்லாம் நாசம் செய்ததும் போதும்,” என பலர் புலம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் திருமண கோஷ்டியினர் அது எதையும் கவனிக்கவில்லை.
அன்று ஹரிக்கும், விசாலினிக்கும் திருமணம்.
ஹரி மேகமலை கிராமத்தில் மின்சார துறையில் டெக்னிஷியனாக பணி புரிபவன்.
ஊரெங்கும் இந்த திருமணத்தைப் பற்றிய பேச்சு இருந்தது!
“இவளுக்கு அடிச்ச யோகத்தை பார்த்தீயா, கவர்ன்மன்ட் மாப்பிளை. அது இதுன்னு பெருசா எதுவும் கேக்கவும் இல்லையாம். இவ என்னவோ பெரிய ரம்பைன்ல அவன் மயங்கி போய் ஒத்தை கால்ல நின்னு கட்டிக்குறான்!”
“யாருக்கும் தெரியும் அக்கா, எல்லாம் இவங்க சொல்றது தானே. அவன் ஊருல அவன் எப்படி இருக்கானோ என்னவோ?”
இப்படி பொறாமை பிடித்த பெண்கள் ஒரு பக்கம் பேசி தங்களின் வயிற்றெரிச்சலை குறைத்துக் கொண்டிருக்க, விசாலினி மணமகள் அலங்காரத்தில் நடந்து வந்தாள்.
கிராமத்து பெண்ணுக்கு உரிய நாணம் அவளிடம் இருந்த போதும், அதையும் மீறி அவளின்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.