Page 12 of 28
”முதல்ல அவன்தானே பிடிச்சான், அவனை விடச்சொல்லு தேவி அப்புறம் நான் விடறேன்” என சொல்ல தேவிக்கு ஆயாசமே வந்தது
எதற்காக இவ்விடம் வந்தாளோ அவ்விசயத்தை மறந்தாள், இருவரையும் பார்த்து கண்களால் கெஞ்சினாள் அதில் அழகரசனே அமைதியாக அவளை விட்டு விலகி நிற்க அதில் அசோக் வெற்றி பெற்றவன் போல போஸ் கொடுத்துவிட்டு தேவியை உடன் அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியேறிச் சென்றான
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நீ ஓசூர் போனதா கேள்விப்பட்டேன் என்ன விசயம் அசோக் ஏதாவது அபிஷியல் விசயமா இல்லை பர்சனலா” என கேட்க அசோக்கின் முகம் கோணியது. சட்டென அவனின் முகம் மாறியதைக்கண்டதும் தேவி குழம்பினாள்