உமா அங்கேயே நின்று கவனிப்பதைப் பார்த்து விட்டு, ஒரு புன்னகையுடன்,
“உட்காருங்க அண்ணி, ஏன் குழந்தையும் வச்சுட்டு நிற்குறீங்க?? அம்மா நீங்களும் உட்காருங்க...” என்றான் விவேக்.
கற்பகமும் உமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு புன்னகையுடன் அமர்ந்தனர்.
“சொல்லுங்க விவேக்... அப்படி என்ன ஸ்ருதிகிட்ட உங்களுக்கு குறை?” என்றாள் உமா.
“குறைன்னு எல்லாம் இல்லை அண்ணி... உங்களுக்கே தெரியும் என்னை பொறுத்த வரை கல்யாணம் என்பது மனம் மட்டுமே சம்மந்தப் பட்ட விஷயமா இருக்கனும்னு...”
“அதெல்லாம் சரி தான் டா... ஸ்ருதிக்கு உன்மேல உயிரு...”
“நிஜமாகவா?”
“ஏன்டா இப்படி? அவளுக்கு உன்னை ரொம்ப பிடித்திருப்பதால் தானே இப்படி உன்னையே சுத்தி சுத்தி வரா?”
“எனக்காக மட்டுமா? அது தான் என் கேள்வி...”
“என்னடா சொல்ல வர...??”
“அம்மா, இப்போ எனக்கு பணம் இல்லை, சொத்து இல்லை... நான் பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரனோட மகன் இல்லை... அப்படின்னு வச்சுப்போம், அப்போவும் கூட ஸ்ருதிக்கு என்னைப் பிடிக்குமா?”
“என்னடா குழப்புற?”
“அப்படியும் அவளுக்கு என்னைப் பிடிச்சா, நிஜமாகவே என் மேல இருக்கிற அன்பு தான்