“ஆமாடா, நீ பெரிய ராஜகுமாரன்...”
“அம்மா, எனக்கு கொஞ்சம் பணம் மட்டும் இன்வெஸ்ட் செய்யுங்க... போதும்...”
“அதெப்படி விவேக், எங்க தொழில் எடுத்து நடத்த முடியாது... ஆனால் பணம் மட்டும் நாங்க தரணுமா? இதோ பாருடா எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் கிட்ட கேட்டுக்கோ...”
“அண்ணன் கிட்ட கேட்கனுமா? என்னம்மா சொல்றீங்க?”
“ஆமாம்டா... எல்லா ப்ராபர்ட்டீசையும் உன் அண்ணன் பேருக்கு எழுத உங்க அப்பா சொன்னார்... இப்போ தானே எனக்கும் காரணம் புரியுது...”
இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ருதியின் முகம் மாறுவதை கவனித்தப்படி,
“அப்போ, இப்போ நான் ஒரு சல்லி காசுக்கும் எஜமானன் இல்லை...” என்றான் விவேக்!
“ஆமாம் இல்லை...!!! நீ மனசு மாறி உங்க அண்ணனை கன்வின்ஸ் செய்தால் மட்டும் தான் உனக்கு சொத்தில் பங்கு...”
“எனக்கு அந்த பணமே வேண்டாம், அம்மா... இதுக்கு மேலே எப்படி என் பிஸ்னஸ் ஹான்டில் செய்வது என்று நானே கவனிச்சுக்குறேன்...” என்று கோபமாக சொல்லி விட்டு விவேக் வேகமாக அங்கிருந்து சென்றான்.
தன் தோழியின் மகள் என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன்,
“பார்த்தீயாம்மா ஸ்ருதி, இந்தப் பையனை...” என்றாள் கற்பகம்.
“இந்த வயசில இப்படி தான இருப்பாங்க, ஆன்ட்டி... அதுக்காக எல்லாம் நீங்க சொத்து இல்லைன்னு சொல்லக் கூடாது...” என்றாள் ஸ்ருதி தயக்கத்துடன்.