(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நிஜம்னு அர்த்தம்...”

  

என்ன விவேக் இது, சின்ன குழந்தை மாதிரி...” என்றாள் உமா.

  

இல்லை அண்ணி... எல்லோருமே அண்ணன் மாதிரி லக்கியா இருக்க முடியாது... கல்யாணம் என்பது ஒரு பெரிய விஷயம், ஒரு முறை தான் முடிவு எடுக்க முடியும் அது பெர்ஃபெக்டா இருக்கனும்...”

  

இப்போ என்ன சொல்ற?”

  

அடுத்த தடவை சுருதி நம்ம வீட்டுக்கு வரும் போது நான் சும்மா ஏதாவது பணம் பத்தி பேசுவேன்... நீங்க எனக்கு எந்த ரைட்ஸும் இல்லை அண்ணனுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு என்பது போல் சொல்லுங்க... அப்படியும் ஸ்ருதி உங்க கிட்ட செல்லம் கொஞ்சி என்னை கல்யாணமும் செஞ்சுக்குறேன்னு சொன்னால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...”

  

கற்பகமும், உமாவும் வாயடைத்துப் போயிருந்தனர்.

  

என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?”

  

என்ன விவேக் இது... இதெல்லாம் சரி படாது...”

  

அண்ணி, அம்மாக்கு பிடிச்ச பொண்ணையே நான் கல்யாணம் செய்துக்குறேன். ஆனால், இந்த ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் என் பக்கம் இருந்து...” என்றான் விவேக் தெளிவாக.

   

உமா மேலே என்ன சொல்வது என்றுப் புரியாது கற்பகம் பக்கம் பார்த்தாள். அவளோ யோசனையுடன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்!!!

  

**********

   

ன்று மாலை வழக்கம் போல் நரேந்த்ரியானின் பங்களாவிற்கு வருகை தந்த வந்த ஸ்ருதி,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.