”நீ கவலைப்படாத 1 மாசம்ங்கறது பெரிய விசயம் இல்லை, நீ ஒழுங்காயிருந்தா 10 நாள்ல கூட வெளிய அனுப்பிடுவாங்க”
“என்ன மாமா இது, ஜெயில் போல சொல்றீங்க”
“ஹவுஸ் அரஸ்ட் மாதிரிண்ணா” என விக்கி சொல்ல
”புரியலைடா”
“உனக்கு இங்க சொந்தமா வீடு கிடையாது, வீடு இருந்திருந்தா உன்னை வீட்லயே அடச்சி வைச்சிருப்பாங்க, வீடு இல்லைங்கறதுக்காக போலீஸ் கஸ்டடியில வைக்கிறாங்க அவ்ளோதான்”
“ஓ சரி சரி விடுங்க மாமா, 1 மாசம்தானே நான் வந்துடறேன் தங்கச்சிகளை மட்டும் பத்திரமா பார்த்துக்குங்க”
“நான் பார்த்துக்கறேன்” என வினிதா பொறுப்பேற்க நிம்மதியடைந்த அழகரும்
”தங்கச்சிங்களை காலையிலயும் சாயங்காலமும் கூட்டிட்டு வரனும் அத்தை”
“நான் பார்த்துக்கறேன் அழகர் என் கவலையே நீதான்”
“என்னை பத்தி கவலை வேணாம், வீட்ல தங்கச்சிங்க தனியா இருக்காங்க, காலி பசங்க தொல்லை பண்ணிடப்போறாங்க நீங்க கிளம்புங்க அத்தை, மாமாவையும் கூட்டிட்டு கிளம்புங்க” என சொல்ல அவளும் சரியென தலையாட்டி விட்டு சென்றுவிட அடுத்து மீசூயி வந்தாள்.
”சாரி அழகர்” என்றாள்
”இருக்கட்டும் விடு உன்னை சொல்லி குத்தமில்லை, அழகு இருக்கற இடத்திலதான் ஆபத்து
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.