காய்கறி வாங்க இவ்ளோ நேரமா ஆகும் என நினைத்து அழகருக்கு போன் செய்த நீலாம்பரிக்கு அவன் போலீசிடம் சிக்கிய விவரம் தெரிய அவளும் காரை தேடி அந்த ஏரியாவுக்கு வந்தாள். காரில் சாவி இல்லாது போக சட்டென டாக்சியில் போலீஸ் ஸ்டேஷன் செல்லலானாள்.
மீசூயியும் தன் அண்ணன் மற்றும் அப்பாவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தங்கள் தவறை நிரூபித்து அழகரை காப்பாற்ற நினைத்தார்கள்.
ரங்கராஜன் வீட்டுக்கு மாயா தன் தந்தையுடன் வந்திருந்தாள். மாயா வந்த நேரம் வீட்டில் வினிதாவும் ரங்கராஜனும் இல்லை, அமிர்தா, வர்ஷினி மட்டும் இருக்கவே அவர்களிடம் விவரம் கேட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள்.
அமிர்தாவுடன்தான் அழகர் இருக்கிறான் என நினைத்துக் கொண்டு காதம்பரி ஆசையாக அமிர்தாவை பார்க்க வர அவள் சொன்னதைக் கேட்டு அவளும் தன் தந்தைக்குத் தகவல் அளித்துவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றாள்.
இன்று விடுமுறை என்பதால் அதிசயமாக மலேஷியாவில் இருந்து விக்கியும் அழகரைக் காண ரங்கராஜன் வீட்டுக்கு வர டாக்சியில் இருந்தபடியே வெளியிலே இருந்த வர்ஷினியிடம் ரங்கராஜனையும் அழகரையும் பற்றிக் கேட்க அவள் சொன்னதைக் கேட்டு போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.
போலீஸ் நிலையம்
ஒரு பக்கம் அழகரால் அடிப்பட்டு கிடந்தவர்கள் இருக்க, மறுபக்கம் அழகர் தனக்கும் நடக்கும் எதற்கும் சம்பந்தமில்லை போல அமர்ந்திருந்தான். பசி வேறு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான்
”நம்மூர் போலீசா இருந்தா இந்நேரம் டீயும், பன்னும், பிரியாணியும் வாங்கித் தருவாங்க, இங்க பாரு தண்ணிக்கு கூட வழியில்லை, பசிக்குது வேற என்ன செய்யலாம்” என யோசித்தவன் அங்கு ஆண்களும் பெண்களும் வேலை செய்வதைக் கண்டு வியந்தவன் தேடிப்பிடித்து ஒரு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.